tamilnadu

img

அரசு பெண் விடுதிகளில் பெண் காவலர்கள் நியமனம்

அரசு பெண் விடுதிகளில் பெண் காவலர்கள் நியமனம்

அமைச்சர்  கீதா ஜீவன் அறிவிப்பு

சென்னை, ஜூன் 9 - பெண்களுக்கான அரசின் அனைத்து சேவை இல்லங்களிலும் இனி பெண் காவலர்களே நியமிக்கப் படுவார்கள் என சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். சமூக நலத்துறை சார்பில் அரசு சேவை இல்லம் தாம்பரம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு 128  மாணவியர், 5 வயதுக்கு உட்பட்ட இரண்டு சிறுவர்கள் தங்கி கல்லூரிகள், பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்த சேவை இல்லத்துக்கு, 13 வயதுச் சிறுமி கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்தார். அவர் இல்லத்தில் தங்கி அங்குள்ள அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி கடத்தல் கடந்த 8ஆம் தேதி பள்ளிக்கு விடு முறை என்பதால் மாணவி பள்ளிக்குச் செல்லவில்லை. இருப்பினும் காலை யில், தன்னுடைய அறையிலிருந்து வெளியில் வந்திருக்கிறார். அப்போது, மர்ம நபர் ஒருவர், சிறுமியின் முகத்தை  துணியால் மூடி இருக்கிறார். அதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, சத்தம் போடுவதற்கு முன்னதாகவே அவரின் வாயைப் பொத்தி தூக்கிக் கொண்டு ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றிருக்கிறார். அந்த நபரின் பிடியிலிருந்து மாணவி தப்பிக்க முடிந்தளவுக்கு போராடியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், மாணவியை சரமாரியாகத் தாக்கியதோடு அவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்திருக்கிறார். இந்தச் சூழலில் அந்த மர்ம நபரிட மிருந்து தப்பிக்க மாணவி முயன்ற போது அவர் தவறி கீழே விழுந்திருக் கிறார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதிக்கு சிலர் வந்திருக் கிறார்கள். அதைப்பார்த்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மருத்துவமனையில் அனுமதி வலியால் துடித்த மாணவியை மீட்ட  சக மாணவிகள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட தில் அவரின் காலில் எலும்பு முறிவு ஏற் பட்டிருப்பது தெரியவந்தது. அதோடு மாணவிக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் நடந்திருப்பதையும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக மாணவி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக் கப்பட்ட மாணவியை பார்க்க வெளி யாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. செய்தியாளர்களுக்கு வேண்டுகோள் இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகத்தில் உள்ள சமூக நல  ஆணையரகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் திங்களன்று (ஜூன் 9) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரக்கூடிய அரசு சேவை இல்லத்தில் தங்கி யிருக்கும் சிறுமியிடம் பாலியல் சீண்ட லில் ஒருவர் ஈடுபட்டுள்ளார் என்கிற செய்தி அறிந்ததும் சிறுமி அனுமதிக் கப்பட்டுள்ள மருத்துவமனைக்குச் சென்று விசாரித்து பின்னர் அவரது தாயாரை நேரில் சென்று சந்தித்தோம். அப்போது, அவர், சிறுமியின் பெயர், முகவரி, அடையாளம் குறித்து எதுவும் வராதபடி பார்த்துக்கொள்ளுமாறு செய்தியாளர்களைக் கேட்டுக் கொண்டார். காவலாளி கைது சமையல் செய்யக்கூடிய நபர் விடுதி யில் இருந்து வெளியே சென்ற நேரத்தில் காவலாளி உள்ளே புகுந்து சிறுமி யிடம் பாலியல் தொந்தரவு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு அந்த காவ லாளியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்” என்றார். பெண் காவலர்கள் - சிசிடிவிக்கள் இந்த விவகாரத்தை தொடர்ந்து, ஆண் காவலர்களுக்கு பதிலாக பெண் காவலர்கள் மூன்று பேர் நியமனம் செய்ய உள்ளதாகவும் அமைச்சர் கூறினார். தமிழ்நாடு முழுவதும் விடுதிக்  கென தனியாக சிசிடிவி கேமராக்கள் அமைப்பதற்கான பணிகளையும் மேற்கொள்ள இருக்கிறோம். இனி வரக்கூடிய காலகட்டங்களில் தமிழ கத்தில் உள்ள அரசு நிறுவனங்கள் அல்லது தொண்டு நிறுவனங்களின் மூல மாக நடத்தப்படக்கூடிய விடுதிகளில் பெண் காவலர்கள் தொடர்ந்து நிய மிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார். இதுவரையில் 138 பிள்ளைகளி டம் விசாரணை மேற்கொண்ட நிலையில், வேறு எந்தச் சிறுமியும் பாலியல் ரீதி யான துன்புறுத்தலுக்கு ஆளாக வில்லை என தெரிய வந்துள்ளது. இனி மேலும் இதுபோன்ற நிகழ்வு நடக்கா மல் பார்த்துக் கொள்ளப்படும். எனவே, மாணவிகளோ சிறுமிகளோ எந்த ஒரு அச்சமும் இன்றி இங்கு வந்து தங்கலாம்” என்றும் அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.