tamilnadu

img

பம்பாயைக் குலுக்கிய தொழிலாளர் எழுச்சி!

பிரிட்டிஷ் அரசின் கொடூர அடக்குமுறைகளுக்கு எதிரான தேசிய போராட்டத்தில் தொழிலாளர்கள் ஆகர்ஷிக்கப்பட்டனர். 1908-ல் லோகமான்ய திலகரை 6 ஆண்டுக்காலம் சிறையில் அடைத்தபோதுதான் இந்தப் போராட்டம் நிகழ்ந்தது. அவருக்கு விதிக்கப்பட்ட ஒவ்வொரு ஆண்டு சிறைத் தண்டனைக்கும் ஒருநாள் என்ற அளவில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். அவர்கள் பிரிட்டிஷ் இராணுவத்துடனும் போலீஸுடனும் மோதினர். அதில் அனேகம் தொழிலாளர்கள் மாண்டனர். அவர்களின் போராட்டம் மொத்த பம்பாய் நகரத்தையும் குலுக்கியது. சிறு வியாபாரிகளும் நடுத்தரவர்க்கத்தினரும் களத்தில் இறங்கினர். எல்லா தொழில்களிலும் வேலைநிறுத்தம் என்ற தங்களின் சக்திமிக்க ஆயுதத்தை அரசியல் லட்சியத்துடன் பயன்படுத்தினர். அந்த லட்சியத்திற்காக அனைத்துத் தொழில்களிலும் வேலைநிறுத்தம் என்ற சக்திமிக்க ஆயுதத்தை தொழிலாளிவர்க்கம் முதல் முறையாக உபயோகித்தது இவ்வாறுதான். மக்கள் அனைவரையும் அணித்திரட்டுவதற்கான திறன் அதற்கு உண்டு என்பது நிரூபிக்கப்பட்டது.  இதைப்பற்றி 1908ஆம் ஆண்டு லெனின் இவ்வாறு எழுதினார் :  ‘‘இந்திய ஜனநாயக ஊழியரான திலகர்க்கு எதிராக பிரிட்டிஷ் நரியர்கள் அறிவித்த மிகப் பிரசித்தமான தீர்ப்பும், பணச் சாக்குகளைப் பதுக்குபவர்கள் ஜனநாயகவாதிகளுக்கு எதிராகக் கையாண்ட எதிர் நடவடிக்கையும் பம்பாய் வீதிகளில் ஆர்ப்பாட்டங்களுக்கும் வேலை நிறுத்தங்களுக்கும் வழியமைத்தது. இந்தியாவிலும் தொழிலாளி வர்க்கம் இதற்குள் உணர்வுப் பூர்வமான அரசியல் போராட்டத்திற்குத் தயாராகியிருக்கிறார்கள். இந்த நிலைமையைப் பார்க்கும்போது இந்தியாவில் ரஷ்ய முறையிலான பிரிட்டிஷ் ஆட்சி தகர்கிறது என்பதாகும்’’.