கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் ஒன்றியத்தில் இருளப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு 55 இருளர் குடும்பத்தி னர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த மாணவி கிருஷ்ண வேணி 12ஆம் வகுப்பு தேர்வில் 380 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த கிராமத்தின் இருளர் மாணவர்கள் சரியான போக்குவரத்து வசதி, பொருளாதார உதவிகள் கிடைக்காத சூழ்நிலை யால் 5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு கூட படிக்க முடி யாத நிலையில் உள்ளனர். பாழடைந்த ஓட்டு வீட்டில் பெற்றோர் முனிராஜ், நாகம்மா அண்ணன் ஆகியோருடன் கிருஷ்ண வேணி வசித்துவருகிறார். திருமணமான இவரின் மூத்த சகோதரியும் ஆரம்பக் கல்வியே பயின்றுள் ளார். வாரத்தில் சில நாட்கள் மட்டுமே கிடைக்கும் மிகக் குறைந்த வருவாயிலேயே வாழ்கையை ஓட்டி வருகின்றனர். இந்நிலையில் மாணவி கிருஷ்ணவேணி தரும புரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் சீரியம்பட்டியில் உள்ள தனியார் தொண்டு நிறுவன விடுதியில் தங்கி திருமல்வாடி அருகில் கோட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தார். 40 மாணவர்கள் 30 மாணவிகள் படிக்கும் வகுப்பில் இவர் மட்டுமே இருளர் வகுப்பைச் சேர்ந்தவர். நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருளர் இனத்தில் இருந்து முதல்முறையாக தேர்ச்சி பெற்றுள்ளார் என் பது குறிப்பிடத்தக்கது. அடுத்து பிகாம், சிஏ படிக்க விரும்புவதாகவும் அதன் பிறகு ஐஏஎஸ் ஆவதே தனது லட்சியம் என்றும் கூறினார் கிருஷ்ண வேணி. இருளப்பட்டி மாணவி கிருஷ்ணவேணியை சந்தித்த வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஸ்ரீதர் மாணவியை பாராட்டி புத்தகம் பரிசாக வழங்கி கல்லூரி உயர் கல்வி பயில வாலிபர் சங்கம் துணை நிற்கும் என்றார். மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் சங்கீதா மாணவியை பாராட்டி அவரின் மேற் படிப்பு செலவுகளை ஏற்றுக் கொள்வதாக தெரி வித்துள்ளார்.