கிருஷ்ணகிரி,செப்.25- கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டத்தில் 1500க்கும் மேற்பட்ட மலை வாழ் இருளர், பழங்குடி, தலித் மக்களை 35 ஆண்டு களுக்கு முன்பு அரசு குடியமர்த்தியது. ஆனால், அந்த இடங்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இதேபோல் 1952-ல் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை கட்டுவதற்கு விவசாய நிலம், வீடுகளை கொடுத்து விட்டு வெளியேறி அர சாங்கத்தால் மாற்று இடத்தில் குடியேற்றப் பட்ட 150-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 65 ஆண்டுகள் கடந்தும் பட்டா கொடுக்கப்பட வில்லை. ராமன் தொட்டி, கும்பளம், சின்ன குத்தி, பெரிய குத்தி, எப்ளம், கோயில் எப்ளம், ஏரி எப்ளம், உட்பட 28 கிராமங்களின் மலைவாழ், இருளர், தலித், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட குடும்பங்கள் இதுவரை பட்டாக்கள் கிடைக்கா மல் அல்லாடி வருகின்றனர். இந்நிலையில், வீட்டு மனைப் பட்டா கேட்டு கடந்த மாதம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சூளகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 1500 க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதனை யடுத்து நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் 60 நாட்களுக்குள் பட்டாக்கள் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனாலும், இதில் முன்னேற்றம் இல்லாத தால் ஓசூர் சாராட்சியர், மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், தலைவர் கோதண்டராமன், முன்னாள் மாவட்டத் தலை வர் முதுபெரும் தோழர் முனிசாமி, பொருளா ளர் முனியப்பா நிர்வாகிகள் சீனிவாசலு ராஜப்பா, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.