tamilnadu

img

மலப்புறம் அருகே ஆற்று நீரில் சிக்கி குழந்தை உட்பட மூவர் பலி

 மலப்புறம், செப்.22- மலப்புறம் மாவட்டம் சோக்காடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 7மாத பெண் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்தனர். இருவர் மீட்கப்பட்டனர். கேரளத்தில் மலப்புறம் மாவட்டம் வேங்கரா பகுதி யைச் சேர்ந்தவர் யூசுப் (25), அபுதாபியில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஷகீதா (19). கடந்த மாதம் திரு மணமான புது தம்பதியர் புல்லங்கோடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். அண்மையில் நிலச்சரிவு ஏற்பட்ட பிறகு அப்பகுதில் உள்ள சோக்காடன் ஆற்றில் ஏற்பட்ட தெளிந்த நீரோடையில் குளிப்பதற்காக சனியன்று மாலை உறவினர்களுடன் சென்றுள்ளனர். ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அப்போது நீரில் சிக்கிய 5 பேர் இழுத்துச் செல்லப்பட்டனர். இதில் யூசுப், ஜுவைரியா, மகள் அபிஷா ஆகியோர் மூழ்கி உயிரிழந்தனர். இவர் களது சடலங்களையும் ஷகிதா, ஜுவைரியாவின் மகன் முகமது அக்மல் ஆகியோரை உயிருடனும் அப்பகுதி மக்கள் மீட்டனர்.