திருவனந்தபுரம், ஆக. 4- கோவிட் கட்டுப்பாடுகளை பராம ரிக்கும் பொறுப்பு முழுமையாக காவல்துறையிடம் வழங்கப்படுகிறது. நோய் தொற்றின் தொடர்பு நபர்களை கண்டறிய உதவி ஆய்வாளர் தலைமை யிலான குழு அந்தந்த பகுதிகளில் செயல்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். திங்களன்று கோவிட் ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்க ளிடம் அவர் மேலும் கூறியதாவது: தனிமை- கண்காணிப்பை மீறி சிலர் வெளியே நடமாடுகிறார்கள். விதிமுறை களை மீறும் சம்பவங்கள் நோய் அதி கரிக்க முக்கிய காரணமாகும். தொடர்புக் கான விலக்கை மீறினால் சம்மந்தப்பட்ட வர் காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும். அங்காடிகளிலும் பொது இடங்களிலும் தனிமனித இடைவெளி பின்பற்றப்படுகிறது என்பதை காவல் துறை உறுதி செய்ய வேண்டும். மருத்து வமனை கண்காணிப்பில் உள்ளவர்கள் அங்கிருந்து சென்றுவிடுகிறார்கள். அத்தகைய நபர்களை உடனடியாக கண்டுபிடிக்க காவல்துறை நடவ டிக்கை எடுக்க வேண்டும். நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவரது தொடர்புகள் கண்டறியப்பட வேண்டும். முதல்நிலை, இரண்டாம் நிலை தொடர்புகளை கண்டறிய வேண்டும்.
962பேருக்கு கோவிட் |
கேரளத்தில் திங்களன்று 962பேருக்கு கோவிட் நோய் தொற்று உறுதி செய்யப் பட்டது. தொடர்பு மூலம் 801 பேருக்கு நோய் பரவி உள்ளது. இதில் நோய் தொற்றிடம் தெரி யாத 40பேர் உள்ளனர். 815 பேர் குணமடைந்த னர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கிளிற்றஸ் (68), ஆலப்புழா ஆறுநாடைச் சேர்ந்த சசிதரன் (52) ஆகியோர் கோவிட் நோயால் உயிரிழந்த தாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். |
இதை காவல்துறை நேரடி யாக மேற்கொள்ள வேண்டும். இத்த கைய நபர்களை கண்டறிய உதவி ஆய்வாளர் தலைமையில் குழு செயல் படும். தொடர்புகளை தேடி கண்டறிதல் இந்த குழுவின் முக்கிய பொறுப்பு. நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் தொடர்பு பட்டியல் இப்போதைய நோய் பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த பொறுப்பு காவல்துறை யிடம் அளிக்கப்படுகிறது. 24 மணி நேரத்துக்குள் தொடர்புகள் கண்டறி யப்பட வேண்டும். கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளி யிலும் உள்ளேயும் கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும். 24 மணி நேரமும் காவல்துறை எச்சரிக்கையு டன் இருக்க வேண்டும். மருத்துவமனை கள், காய்கறி சந்தை, இறைச்சிக்கடை, திருமண வீடுகள், மரண வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவற்றில் காவல்துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதில் மாநில அளவில் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும், தேவையான அறிவுரைகள் வழங்க வும் மாநில காவல் பொறுப்பு அதிகாரி யான (நோடல் ஆபீசர்) கொச்சி ஆணை யர் விஜய் சாகர் நியமிக்கப்பட்டுள்ளார். நோய் தொற்றுள்ள நபர்களின் தொடர்புகள் கண்டறியப்பட்டால் அவர் கள் குடியிருக்கும் இடம் தனியாக அடை யாளப்படுத்தப்படும்.
அதை தனியாக பிரித்து கட்டுப்பாட்டு மண்டலங்கள் ஆக்கப்படும். இதில் துல்லியமான வரை படம் தயாரிக்கப்படும். இதன் அடிப் படையில் கட்டுப்பாட்டு மண்டலம் அறி விக்கப்படும். இந்த மண்டலங்களில் ஆட்கள் வெளியே செல்லவும் வெளி யிலிருந்து மற்றவர்கள் உள்ளே செல்ல வும் வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. அவசியமான பொருட்கள் வீடுகளில் ஒப்படைக்கப்படும். அதற்கான கடை கள் ஏற்பாடு செய்யப்படும். அதில் ஏதே னும் சிரமம் ஏற்பட்டால் காவல்துறையி னர் அல்லது காவல் தன்னார்வலர்கள் பொருட்களை வீடுகளில் ஒப்படைப்பார் கள். கட்டுப்பாட்டு மண்டலங்கள் விடு விக்கப்படுவது அந்த பகுதியில் உள்ள முதல்நிலை, இரண்டாம் நிலை தொடர்பு களில் நோய் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகுதான். இவை இயல்பாகவே சற்று கூடுத லான சிரமத்தை மக்களுக்கு அளிப்பதா கும். நோய் வந்து உயிருக்கு அச்சு றுத்தல் ஏற்படுவதைவிட நல்லது சிர மத்தை அனுபவிப்பதாகும். தொடர்புக ளே நோய் பரவக்காரணம். இதை தவிர்க்க வேண்டும். இதில் அனைவரது ஒத்துழைப்பும் தேவை. நோய் தொற்று ஏற்பட்டால் காவல்துறை தலைமை அலு வலகம் மூடப்படும். இது காவல்துறை நடவடிக்கைகளை பாதிக்காது. கட்டுப்பாட்டு அறையும் கம்பில்லா தொடர்பும் செயல்படும். கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் அலுவலகம் முழு மையான செயல்பாட்டை தொடரும் என முதல்வர் கூறினார்.