tamilnadu

img

முத்தூட் நிர்வாகம் பிடிவாதத்தை கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த சிஐடியு வலியுறுத்தல்

திருவனந்தபுரம், செப்.17- முத்தூட் பைனான்ஸ் ஊழி யர்கள் ஆகஸ்ட் 20 முதல் நடத்தி வரும் வேலை நிறுத்தப் போ ராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பிடிவாதத்தை கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்துமாறு முத்தூட் பைனான்ஸ் நிர்வா கத்துக்கு சிஐடியு வேண்டுகோள் விடுத்துள்ளது.  சிஐடியு தலைவர் ஆனத்தல வட்டம் ஆனந்தன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடந்த மாநிலக்குழு கூட்டம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சம்பள உயர்வு வழங்குக, பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிடுக உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி முத்தூட் பைனான்ஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முத்தூட் பைனான்ஸ் தொழிலாளர்கள் தொ ழிலாளர் ஆணையரிடம் ஏற் படுத்திய ஒப்பந்தத்தை அமல் படுத்தவில்லை. மூன்று ஆண்டு களுக்கு முன்பு ஊழியர்கள் சங்கம் அமைத்தது முதல் பழி வாங்கும் வகையில் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. வங்கி சாரா நிதி நிறுவனங்களின் தொழி லாளர்களுக்கான சம்பளத்தை முடிவு செய்து 2016 ல் அரசு பிறப்பித்த ஆணைக்கு முத்தூட் உரிமையாளர் நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றுள்ளார். இந்த பின்னணியில் ஊழியர்க ளின் சம்பளம் குறித்து முடிவு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.  ஆகஸ்ட் 17ல் மாநில தொழி லாளர் ஆணையர் முன்பு பேச்சு வார்த்தை தொடங்கியது என்றாலும் நிர்வாகத்தின் பிடிவா தத்தால் எவ்வித தீர்வும் எட்டப் படவில்லை. தொடர்ந்து செப்டம்பர் 9ஆம் தேதி மாநில தொழில்துறை அமைச்சர் டி.பி.ராமகிருஷ்ணன் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போ தும் நிர்வாகத்தின் பிடிவாதம் தொடர்ந்தது. 2018-19ல் ரூ.2100 கோடி லாபம் ஈட்டிய நிறுவ னத்தின் ஊழியர்களுக்கு நியாய மான சம்பளம் இல்லை. தொழிற்சங்கத்தில் உறுப்பின ராக சேர்ந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படு கிறது. போராட்டத்தின் பெயரால் சிஐடியு மீது களங்கம் கற்பிக் கப்படுகிறது.  நியாயமான உரிமைப் போராட்டத்தை ஆதரிக்க மாநிலத்தின் அனைத்து தொழி லாளர்களும் முன்வரவேண்டும் என சிஐடியு மாநிலக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.