tamilnadu

img

பெட்டிமுடியில் 22 பேரை தேடும் பணி தீவிரம் மேலும் 6 சடலங்கள் மீட்பு; இறப்பு 49 ஆக அதிகரிப்பு

மூணார், ஆக.10-  ராஜமாலை பெட்டிமுடி துயரத்தில் மேலும் ஆறு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நைமக்காடு கண்ணன்தேவன் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் லயத்தின் மீது ஏற்பட்ட நிலச்சரிவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 22 பேரை தேடும் பணியில் 10 குழுக்களாக 100 பேர் ஈடுபட்டுள்ளனர். லயத்துக்கு அருகில் உள்ள ஆற்றிலிருந்து சுமார் 2 கிமீ தூரத்தில் திங்களன்று 6 சடலங்கள் மீட்கப்பட்டன. இதில் வினோதினி (14), ராஜலட்சுமி (12), பிரதிக்சா (32) ஆகியோர் அடையாளம் காணப்பட்டனர். வியாழனன்று இரவு ஏற்பட்ட இந்த துயரத்தில் சிக்கியதில் 12 பேர் மட்டுமே உயிர் தப்பியுள்ளனர். நிலச்சரிவில் 10 அடி உயரத்துக்குமேல் லயத்தில் உள்ள வீடுகள் மீது மண்ணும் பாறாங்கற்களும் மூடியுள்ளன. மோப்பநாயும் பயன்படுத்தப்பட்டது. பாறைகளை உடைத்து தேடும் பணி தொடர்ந்தது.