tamilnadu

img

கடலோர காவலில் இனி கேரளத்தின் படை

திருச்சூர். ஜுன் 30- கேரளத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது ஆர்ப்பரித்து வந்த வெள்ளப்பெருக்கிலிருந்து சக மனிதர்களின் உயிர்களை பாதுகாத்த மீன் தொழிலாளர்களை கேரளத்தின் படை என அம்மாநில மக்கள் கொண்டா டினர். அத்தகைய மீனவ குடும்பங்க ளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கடலோர காவல்படைக்கு மீனவ இளை ஞர்கள் 177 பேர் தேர்வு செய்யப்பட்டுள் ளனர். அவர்களுக்கான நியமன உத்தரவுகளை முதல்வர் பினராயி விஜயன் ஞாயிறன்று வழங்கினார். திருச்சூர் ராமவர்மபுரத்தில் கேரள மாநில காவல்துறை அகாடமி யில் நடந்த கேரள கடலோர காவல்துறை யின் அணி வகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொண்டார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர்  சக மனிதர்களை பாதுகாத்த மீன் தொழிலாளர்களுக்கான வெகுமதி யாக இந்த சிறப்பு நியமன உத்தரவு வழங்கப்படுகிறது என்று கூறினார். 200 நபர்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டதில் 177 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீத முள்ள 23 பேரும் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள். கடலில் மீட்பு பணிகளுக்கு மட்டுமல்லாமல்  கடல் எல்லைகளில் பாதுகாப்பு பணியிலும் இவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். கடல் ரோந்து பணிகளுக்கான பயிற்சியும் இவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என முதல்வர் தெரிவித்தார். 5 பெண்கள் உட்பட 177 பேர் கொண்ட அணியின ருக்கு பயிற்சியில் தேர்ச்சி பெற்றதற்கு முதல்வர் வாழ்த்து கூறினார்.

தவறு செய்தால் கடும் நடவடிக்கை

தவறு செய்யும் காவல்துறையினரை பாதுகாக்கும் நிலைபாடு கேரள அரசி டம் இல்லை என முதல்வர் பினராயி விஜயன் கூறினார். தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை. அண்மை யில் ஏற்பட்டதை (லாக்கப் மரணம்) தனிப்பட்ட நிகழ்வு என ஒதுங்கி நிற்க  முடியாது. ஆயிரக்கணக்கான மாறுபட்ட நபர்கள் பணியாற்றும் படையே காவல் துறை. இவர்களில் சிலருக்கு தனிப்பட்ட மனக்குறைகள் ஏற்படலாம். அத்தகைய நபர்களின் மனக்குறைகளை அப்படி யே பணியில் பிரதிபலிக்கும் நிலை கூடாது. ஆனால் தங்களது பணியை கடமை உணர்வுடன் மேற்கொள்ளும் போது தவறான பிரச்சாரமும் அதன் பகுதியாக குற்றச்சாட்டுகளும் வர லாம். அத்தகைய பிரச்சாரம் மற்றும் குற்றச்சாட்டுகளின் பின்னால் செல்ல வேண்டியதில்லை. ஆங்கிலேயர் காலத்தில் காவல் துறையினர் மக்களை எதிரிகளாக பார்த்தனர். விடுதலை பெற்ற இந்தியா விலும் பெரிய மாற்றும் ஏதும் இதில் வந்துவிடவில்லை. ஆனால் மாற்றத்துக் கான குரல் நமது சின்னஞ்சிறு கேர ளத்திலிருந்துதான் எழுந்தது. கேர ளத்தின் முதலாவது அரசின் காவல்துறை கையேட்டில் குறிப்பிட்ட வார்த்தைகள் நாடு முழுவதும் கவனம் பெற்றது. இடைவெளி விட்டாவது அந்த அரசின் முன்மாதிரி தொடர்கிறது. காவல்துறைக்கு மனிதாபிமான முகத்தைக் கொடுக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.