திருவனந்தபுரம், ஆக.3- திருவனந்தபுரத்தில் தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் என்ஐஏ கைது செய்தவர்க ளில் ஆசிரியரது கை வெட்டிய வழக்கின் குற்றவாளியும் உள்ளார். மூவாற்றுப்புழயில் சனியன்று முகம்மதலி இப்ராகிம், முகம்மதலி ஆகிய இருவரை என்ஐஏ கைது செய்தது. இவர்கள் கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்ட னர். இதில் பாப்புலர் பிரண்ட் ஊழி யரான முகம்மதலி இப்ராகிம் ஆசி ரியரது கையை வெட்டிய வழக்கில் குற்றவாளியாவார். தங்க கடத்தல் வழக்கில் ஏற்கனவே கைதான கே.டி.ரமீஸ் அளித்த தகவலின்பேரில் இவர்கள் இருவரும் கைது செய் யப்பட்டனர். ரமீஸிடமிருந்து தங்கத்தை வாங்கி இவர்கள் இரு வரும் பல்வேறு இடங்களில் விநி யோகம் செய்துள்ளனர். இதோடு கடந்த ஒரு வாரத்தில் 6 பேர் தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டனர். சொப்னா, சந்தீப் நாயர், சரித், ஜலால், கே.டி. ரமீஸ், முகம்மது அலி, முகம்மது இப்ராகிம், முகம்மது ஷாபி, செய்த லிவி, பி.டிஅப்துல் ஆகிய 10 பேரை இதுவரை என்ஐஏ கைது செய்துள் ளது. பிடிபட்டவர்களின் வீடுகளில் பரிசோதனை நடந்தது. அப்போது 2 ஹார்டு டிஸ்க்குகளும் முக்கிய சான்றுகளும் கிடைத்துள்ளன. தங்க கடத்தலில் தீவரவாத தொடர்பு உள்ளதாக என்ஐஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.