tamilnadu

img

தொழிலாளர் வேலை நேரத்தை அதிகரிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கரூர், மே 11- தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவதையும் தொழிலாளர் நலச் சட்டஙகளைத் திருத்து வதையும் கண்டித்து தமிழகம் முழுவதும் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிஐடியு சங்க கரூர் மாவட்ட குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சிஐடியு அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சங்க மாவட்ட தலைவர் ஜி.ஜீவா னந்தம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் சி.முருகேசன் பேசினார். மாவட்ட நிர்வாகிகள் கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, தண்டபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மத்திய, மாநில அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
பொன்னமராவதி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதியில் சிஐடியு மாவட்ட துணைச் செய லாளர் தீன் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தி னார். சிஐடியு உறுப்பினர்கள் அவரவர் வீடுகளிலிருந்து போராட்டம் நடத்தினர்.
அரியலூர்
அரியலூரில் சிஐடியு மாவட்டச் செயலா ளர் துரைசாமி தலைமையில் மாவட்டப் பொ ருளாளர் சிற்றம்பலம், கிருஷ்ணன், செல்வ ராஜ், அர்ச்சுணன், வேல்விழி, சந்திரா உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
திருக்கடையூர்
நாகை மாவட்டம், திருக்கடையூரில் இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் துணை செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.