நாகர்கோவில், ஆக.18- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே சரலூர் பகுதியில் நீலவேணி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோவிலின் பூசாரி திங்களன்று இரவு பூஜை முடிந்த பின்னர் கோவில் நடையை அடைத்து சென்றார். இந்நிலையில் செவ்வா யன்று காலை வந்து பார்த்த போது கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடம் வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதில் கோயிலின் கதவு மூடப்பட்டிருந்த நிலை யில், கதவின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் உள்ளே சென்றுள்ளனர். அங்கு நீல வேணி அம்மன் சிலைக்கு அணி விக்கப்பட்டிருந்த தங்கத்தாலி யை கொள்ளையடித்ததோடு உண்டியலில் இருந்த பணத்தையும் திருடி சென்றது தெரியவந்தது. இந்த தகவல் அறிந்து ஊர் மக்கள் அனைவரும் கோயிலில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து கோட்டார் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.