நாகர்கோவில், ஜூலை.4- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் ஒயிட் மெம்மோரியல் ஹோமி யோபதி மருத்துவ கல்லூரியும் இணைந்து நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் இலவச மருந்து வழங்கும் முகாம் பரசேரியில் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு கணேஷ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ரிச்சர்ட் பிராங்கிளின், இம்மானுவேல் சாரோன் மற்றும் மருத்துவர்கள் கலந்துக் கொண்டு மருந்துகள் வழங்கினர். இதில், விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர்கள் ஆறுமுகம் பிள்ளை, என்.முருகே சன், மாவட்ட செயலாளர் ஆர்.ரவி, ஒன்றிய தலைவர் இராமசந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலாளர் டி.ஜெ.புஸ்ப தாஸ் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதுபோன்று, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கமும், ஒயிட் மெமோரியல் ஹோமியோபதி மருத்துவகல்லூரியும் இணைந்து, பார்வதிபுரம், இலந்தையடி, குருந்தன்கோடு, தோவாளை, அருமநல்லூர், காருபாறை உள்ளிட்ட பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆர்ஸ் ஆல்ப் 30 மருந்து இலவசமாக பொதுமக்க ளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில், மாதர் சங்க மாநில துணை செயலாளர் என்.உஷா பாசி, மாவட்ட செயலாளர் ரகுபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். எஸ்.கண்ணன், விவசாய தொழிலா ளர் சங்க மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி, சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் ராஜன், திமுக நிர்வாகி மகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.