அருமனை, மார்ச் 16- கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக குடியுரிமை பாது காப்பு மாநாட்டு சனியன்று நடந்தது. காவல்துறையினர் தடை விதித்திருந்த நிலையில் உயர்நீதிமன்ற அனுமதி பெற்று இம்மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது. மாநாட்டிற்கு மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் சி.சசிகுமார் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப் பாளர்கள் சி.சங்கரன், பி.எ.தேவதாஸ், சி.ஸ்டீபன், டி.சி.டார்வின், சதீஷ், ஜெய காந்தன், முழுக்கோடு ஊராட்சித் தலை வர் சி.மாரியசெல்வி விலாசினி முன்னிலை வகித்தனர். கே.ஆன்றனி, ஜாண்கிறிஸ்டோபர், சிற்றார் ரவிச்சந் திரன், திருவனந்தபுரம் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க செய லாளர் அசோகன் உள்ளிட்டோர் பேசி னர். தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா பேசுகையில், இந்த குடியுரிமை பிரச்சனை எல்லா மதத்தினரையும் பாதிக்கிறது. பிராமணியத்தை மீண்டும் தலைதூக்கச் செய்கிறது. மக்களை பிளவுபடுத்தி அடிமை யாக்குகிறது. இதற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு கோணங்களில் அமைதியான போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சனைகளை தூண்டிவிட்டு கலவரங்களாக மாற்ற முயற்சிக்கி றது. இப்பகுதியில் இந்த மாநாடானது மக்களுடன் இணைந்து மத உணர்வு களுக்கு அப்பாற்பட்டு நடத்தப்படு கிறது என்றார்.
அனுமதி மறுப்பு
இந்த மாநாட்டுக்கான அனுமதி கோரி பத்து நாட்களுக்கு முன்பே அருமனை காவல் நிலையத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அனுமதி பெற்று விளம்பரப் பணிகளை முடித்த நிலையில் மாவட்ட காவல் துறை மாநாட்டுக்கான அனுமதியை மறுத்தது. பின்னர் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையின் அனுமதி பெற்று மாநாடு நடை பெற்றது.