நாகர்கோவில், ஜூன் 22- கணியாகுளம் ஊராட்சியில் ஆல ம்பாறை - பார்வதிபுரம் வழியாக செல்லும் அனந்தனாறு கால்வாயில் பொதுப் பணித்துறையால் கட்ட ப்பட்ட படித்துறையை சுமார் 50 ஆண்டுகளாக அவ்வட்டார மக்கள் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கு மாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் 12 அன்று இரவோடு இரவாக ஜெகே நகர் பகுதியை சேர்ந்த தனிநபர் ஒரு வர் சிமெண்ட் கலவையால் சட்டவிரோ தமாக படித்துறையை மூடி அடைத்து ள்ளது தெரியவந்தது. இதுகுறித்து நியாயம் கேட்டும், படித்துறையை மீட்கக்கோரியும் பொதுமக்கள் கால்வாய் அருகில் திரண்டனர். அப்போது அங்கு வந்த வட சேரி காவல்துறையின் உதவி ஆய்வா ளர் அனில்குமார், பொதுமக்க ளின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக ஆக்கிரமிப்பா ளருக்கு ஆதரவாக இருந்து, கூடி நின்ற பொதுமக்களையும், பெண்க ளையும் தகாத வார்த்தைகளால் பேசி யதுடன், பொது மக்களுக்கு ஆதர வாக குரல் கொடுத்ததற்காக, விவசா யத் தொழிலாளர் சங்க மாவட்டச் செய லாளர் மலைவிளை பாசியின் சட்டைக் காலரை பிடித்து இழுத்து அவமரியா தையாக நடந்து கொண்டார்.
இப்பிரச்சனைகள் குறித்து விச, விதொச மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் சம்பந்தப்பட்ட மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு தக வல் கொடுத்ததுடன் நேரில் சென்று மனுக்கள் கொடுக்கப்பட்டன. எனினும் நடவடிக்கை எடுக்காததால் பார்வதிபுரம் பேருந்து நிலையம் அரு கில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் திங்க ளன்று அதிகாலை பொதுப்பணித்து றையினர் சம்பந்தப்பட்ட படித்து றையின் மீதான அடைப்பை அகற்றி மீட்டதுடன், ஆக்கிரமிக்கப்பட்ட பாதையையும் மீட்டுள்ளனர். எனி னும் காவல் அதிகாரி மீது இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ள நிலையில் விரைந்து நடவ டிக்கை எடுக்க தொடர்ந்து வலியு றுத்தப்படும் என விவசாயத் தொழிலா ளர் சங்க மாவட்ட தலைவர் என்.எஸ்.கண்ணன் தெரிவித்தார்.