tamilnadu

நீரேற்றும் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் குடும்பத்துடன் தொழிலாளர்கள் உண்ணாநிலை

கல்பாக்கம், ஜூலை 18-  காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கத்தில் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் மற்றும் அணுமின் நிலையத்தில் பணி புரியும் ஊழியர்கள் வசிக்கும், கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம் மற்றும் அணுபுரம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவ தற்காக, பனங்காட்டுச்சேரி கிரா மப்பகுதியில் உள்ள பாலாற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பாலாற்றங்கரையில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு சீரான முறையில் குடிநீர் வழங்குவ தற்காக, நீரேற்று நிலையங்கள் அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்காக, நீரேற்று நிலையத்தில் 47 பணியாளர்கள்  தற்காலிக முறையில் பணியமர்த்த ப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.350 என்ற தினக்கூலி அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், கடந்த 14 ஆண்டுகளாக நீரேற்று நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். இந்நிலையில், பணிநிரந்த ரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நீரேற்று நிலையம் முன்பு, குடும்பத்தினருடன் தொழி லாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர்,  நீர்வள ஆதாரத்துறை பொறியாளர்கள் தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கே.பழனிசாமி, மாவட்ட துணைச் செயலாளர் பகத்சிங்தாஸ் ஆகியோர் பங்கேற்றனர். பொதுப்பணித்துறையின் முதன்மை பொறியாளர் மற்றும் தலைமை பொறியாளர்களுக்கு 10 நாட்களுக்குள் பரிந்துரை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த னர். உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், அடுத்த கட்டப்போராட்டத்தில்  ஈடுபடுவோம் என தொழி லாளர்கள் தெரிவித்துள்ளனர்.