tamilnadu

விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி

திருப்பெரும்புதூர், ஜூன் 21 காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகில் உள்ள  ஒரகடத்தில் ஓட்டலில் உள்ள கழிவு நீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி ஒருவர் இறந்தார். மற்றொருவர் கவலைக்கிடமாக உள்ளார். ஒரகடத்தில் ஆச்சி இட்லி கடை  என்ற பெயரில் இயங்கிக் கொண்டு  உள்ள ஹோட்டலில் கழிவு நீர் தொட்டி  உள்ளது. இந்த தொட்டியில் சுத்தம் செய்வ தற்காக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த செந்தில் (வயது 26)  இறங்கி யுள்ளார். அப்பொழுது விஷவாயு தாக்கி அவர் மூச்சுத் திணறி உயிருக்கு ஆபத்தான நிலையில்  கிணற்றில் போராடிக் கொண்டி ருந்தார். அவரை பார்த்தவுடன் காப்பாற்றச் சென்ற திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அசோக் வயது 23 அவரும்  விஷவாயு தாக்கியதால் ஆபத்தான  நிலையில் இருந்தார்.  உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இருவரையும் மீட்டனர். ஆனால், அதில் செந்தில் சடல மாக மீட்கப்பட்டார். அசோக் என்ப வர் மீட்கப்பட்டபோது கவலைக்கிட மாக இருந்தார்.  அசோக்கை மேல் சிகிச்சைக்காக செங்  கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். சடலமாக மீட்கப்பட்ட செந்தில் என்பவரை பிரேத பரிசோதனைக்கு திருப் பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஒரகடம் காவல்துறை இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.