tamilnadu

img

வாகனம் மோதி 12 பசுமாடுகள் உயிரிழப்பு

திருப்பெரும்புதூர்,செப். 22 திருப்பெரும்புதூர் அருகே சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 12 பசு மாடுகள் உயிரிழந்துள்ளன. மாவட்ட ஆட்சியர் உத்தரவை யாரும் கடைபிடிக்காததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். திருப்பெரும்புதூர் சுற்று வட்டாரப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஆடு, மாடு போன்ற கால்நடை களை வளர்த்து வருகின்ற னர். இதன் உரிமையாள ர்கள் இந்த கால்நடைகளை முறைப்படி பட்டிகளில் அடைத்து வைத்து பாது காப்பாக வளர்ப்பதில்லை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைக ளால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த சில மாதங்களில் இந்த விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் இந்து தமிழ் நாளி தழில் சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படுவ தாக செய்தி வெளியிட ப்பட்டது. இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் ஒரகடம் - திருப்பெரும்புதூர் சாலை யில் நேற்று அதிகாலை 2 மணியளவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 12 பசு மாடுகள் உயிரிழந்தது. பின்னர் காலையில் மாட்டின் உரிமையாளர்கள் இறந்த மாடுகளை அப்புறப்படுத்தினர். முறை யாக நடவடிக்கை எடுத்திரு ந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.
மாவட்ட ஆட்சியர் உத்தரவு என்னாச்சு? 
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா கடந்த ஆண்டு வெளியிட்ட செய்திக்குறிப்பில் காஞ்சி புரம் மாவட்டம், விபத்துக்கள் அதிகமாக ஏற்படும் மாவட்டமாக அரசால் கருதப்பட்டுள்ளது. ஆய்வு செய்தபோது விபத்துக்க ளில் ஒரு பகுதி நெடுஞ்சாலை களில் சுற்றித்திரியும் கால்நடைகளால் ஏற்படுவ தாகத் தெரியவந்தது. கால்நடைகளை சாலைக ளில் சுற்றித்திரிய விட க்கூடாது என வலியுறுத்தி யும் இதனைக் கால்நடை உரி மையாளர்கள் கடைப்பிடிக்க முன்வருவதாகத் தெரிய வில்லை. சாலைப் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இனிவரும் காலங்க ளில் கால்நடைகளைச் சாலை களில் விட்டால் கால்நடை கள் பிடிக்கப்பட்டு பொது ஏலத்தில் விடப்படும் என்று எச்சரித்திருந்தார்.மேலும் கால்நடை உரிமை யாளர் மீது குற்றவியல் நட வடிக்கையும் மேற்கொள்ள ப்படும், எனவும் அவர் கூறியிருந்தார்.  மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவை அரசு அதிகாரிகள் அமல்படுத்த வில்லை. எனவே இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறா மல் இருக்க சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரி ந்தால் அதன் உரிமையாள ர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் வலியுறுத்தி யுள்ளனர்.