tamilnadu

img

அனுமதியின்றி குடிநீர் எடுத்த வாகனங்கள் பறிமுதல்

காஞ்சிபுரம், மே 28- வாலாஜாபாத் பகுதியில் அனுமதியின்றி குடிநீர் எடுத்த லாரி, டிராக்டரை வட்டாட்சியர் பறிமுதல் செய்தார்.மழை இல்லாததால், வாலாஜாபாத் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் நிலத்தடி நீர் வெகுவாககுறைந்து வருகிறது. இந்நிலையில் வாலாஜாபாத்தை சுற்றியுள்ள கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளிலிருந்து தண்ணீரை  லாரிகள் மற்றும் டிராக்டர் மூலம் எடுத்துஅதை, அதிக விலைக்குவிற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்துள்ளன.இதனைத் தொடர்ந்து, சார் ஆட்சியர் சரவணன் உத்தரவின் பேரில் வாலாஜாபாத் வட்டாட்சியர் கோடீஸ்வரன், மண்டல துணை வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் வாலாஜாபாத் மற்றும் சுற்றுப்புறங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போதுநத்தாநல்லூர், சேர்காடு பகுதியில் அனுமதியின்றி லாரிகளில் குடிநீர் எடுத்தனர்.  உடனே அதிகாரிகள் லாரி மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும், பறிமுதல் செய்த டிராக்டரில் பதிவு எண் ஏதும் இல்லை. குடிநீர் கொண்டு செல்ல எந்த முறையான ஆவணங்களும் இவர்களிடம் இல்லை. இதனைத் தொடர்ந்து இவர்கள் மீது  குற்ற வழக்கு பதிவு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிநீர் தேவை அதிகம் உள்ளதால், அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி  விற்பனை செய்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.