சென்னை:
தடையின்றி கேபிள் டிவி சேவை வழங்கும் ஆப்ரேட் டர்கள் மீது வழக்கு பதிந்து, வாகனங்கள் பறிமுதல் செய் வதை கைவிட வேண்டும் என்று கேபிள் டிவி ஆப்ரேட் டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ் நாடு செய்தித்துறை அமைச் சர் மு.பெ சாமிநாதனுக்கு, தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொது நல சங்கத்தின் பொருளாளர் சு.வெள்ளைச்சாமி அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதனால் வீட்டில் இருப்பவர்களுக்கு பொழுது போக்கு சாதனமாக கேபிள் டிவி உள்ளது. மக்ககளுக்கு கேபிள் டிவி தடையின்றி வழங்கும் சேவை தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் செய்து வருகின்றனர்.கேபிள் ஆபரேட்டர்கள் முறைப்படி முககவசம் அணிந்து செல்கின்றனர். சங்க அடையாள அட்டை காண்பித்தாலும் பல இடங்களில் காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்கின்றனர். இதனால் தடையின்றி கேபிள் டிவி சேவையை வழங்க முடியவில்லை.
கேபிள் டிவி சேவை சரிவர கிடைக்காத நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் சூழல் உள்ளது. ஆகவே கேபிள் டிவி மற்றும் அகண்ட அலைவரிசை தொழிலாளர்கள் வேலை செய்வதை தடுக்க வேண்டாம் என காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.