காஞ்சிபுரம், ஜூன் 28- காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு அறிகுறியுடன் வரும் நபர்களுக்கு பரிசோதனை செய்யப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. கொரோனா அறிகுறிகள் உள்ள நபர்கள் அரசு மருத்து வமனைக்கு சென்றால், சளிக்கான மாத்திரை கொடுத்து ஒரு வாரத்திற்கு பிறகு வருமாறு கூறுவ தாக பரவலாக புகார் எழுந் துள்ளது. இதுகுறித்து சிஐ டியு மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் மேற் கொண்ட ஆய்வில் மேற் கண்ட புகார் உறுதிப்ப டுத்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர் ஒருவர், காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனைக்கு பரி சோதனை செய்ய சென்றுள் ளார். அவரை பரிசோதிக்கா மல் அலைகழித்துள்ளனர். இதன்பின்னர், தீயணைப்பு துறை அலுவலர் ஒருவர் பரிந்துரையையடுத்து அவருக்கு தொற்று பரி சோதனை செய்யப்பட்டுள் ளது. இதனை மற்றொரு ஊழியரிடம் அவர் பகிர்ந்து கொள்ளும் உரையாடல் சமூக வலைத்தளத்தில் அதி களவு பகிரப்பட்டு வரு கிறது.
அந்த உரையாடலில் பரிசோதனை செய்து கொண்ட அரசு ஊழியர், “மருத்துவமனையில் கொஞ் சம் கூட அக்கறை எடுப்ப தில்லை. பரிசோதனைக்கு வராதீர்கள். பரிசோதனை எடுக்க மாட்டோம். வருகிற அனைவருக்கும் பரி சோதனை செய்யாதீர்கள். அப்படி செய்தால் அனை வருக்கும் நோய் தொற்று உள்ளது தெரிந்துவிடும். மாவட்ட நிர்வாகத்திற்கு கெட்ட பெயர் ஏற்படும். இது மாவட்ட மருத்துவமனை நிர்வாகம் கூறியது. நீங்கள் சென்று வாருங்கள் என்று வெளிப்படையாகவே கூறு கின்றனர். இதுகுறித்து சங்க நிர்வாகிகளிடம் கூறினால் அவர்களும் இதையேதான் கூறுகின்றனர். தொடர்ந்து வலியுறுத்தியதால்தான் எனக்கு பரிசோதனை எடுக்கப்பட்டது” என்கிறார். “கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மருத்துவ மனை ஊழியர்களின், மருத்துவர்களின் சேவை களை போற்றி பாராட்டப் படுகிறது. அரசின் நிர்ப்பந் தத்தின் காரணமாக மருத்து வர்கள், செவிலியர்கள், ஊழி யர்கள் மக்களுக்கு முழுமை யாக சேவையாற்ற முடியா மல் தவிக்கின்றனர்.
அதற்கு உதாரணமாக காஞ்சிபுரம் மருத்துவமனை உள்ளது. மாவட்டத்தில் பாதிப் பின் அளவிற்கு ஏற்ப பரி சோதனைகள் நடைபெற வில்லை. நிர்பந்தத்தின் அடிப்படையில்தான் பரி சோதனை செய்யப்படு கிறது. கடந்த 20ந் தேதி அரசு வெளியிட்ட விவரப்படி 13 ஆயிரம் பரிசோதனை கள் மட்டுமே செய்யப் பட்டுள்ளது. இதிலும் வெளி மாநிலங்கள், நாடுகளில் இருந்து வந்தவர்களை கழித்தால் உள்ளூர் மக்க ளின் எண்ணிக்கை சொற்ப மாகவே இருக்கும். எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரிசோதனை அளவை அதிக ரிக்க வேண்டும்” என்று மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் காஞ்சிபுரம் நகரச் செய லாளர் சி.சங்கர் வலியுறுத்தி உள்ளார்.
மேலும் 86 பேருக்கு தொற்று
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி களில் 22, திருபெரும்புதூர் 24, உத்தரமேரூர் 3, வாலாஜா பாத் 11, படப்பை 1, குன் றத்தூர் 4, ஐயப்பன்தாங்கல் 4, மாங்காடு 6, கோவூர் 3, மவு லிவாக்கம் 1, மலைப்பட்டு 2, வடுகப்பட்டு 1, சிக்கராயபுரம் 1, பழந்தண்டலம் 1, ஒரகடம் 1, கெருகம்பாக்கம் 1 என 86 பேருக்கு ஞாயிறன்று (ஜூன் 28) தொற்று உறுதி செய்யப் பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 1769ஆக உயர்ந்துள்ளது.