காஞ்சிபுரம், பிப்.15- காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 7 இரவுக் காவலர் பணியி டங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன, இரவுக் காவலர் பதவிக்கு ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப் பிக்கப்பட வேண்டும். இதற்கு 18 பூர்த்தி வயது அடைந்தவர்கள், 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண் ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் நபர்களுக்கு 35. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப் பட்ட நபர்களுக்கு 32. பொதுப் பிரிவின ருக்கு 30 வயது இருக்க வேண்டும். வயது வரம்பு அரசு விதிகளின்படி 1.7.2019 அன்று நிர்ணயம் செய்யப்பட்ட வயது வரம்புக்குள் மிகாமல் இருக்க வேண்டும், சம்பள விகிதம் ரூ. 15,700 – 50,000 மற்றும் இதரபடிகள் ஆகும். விருப்பமும். தகுதியும் உள்ள நபர்கள் கல்வித் தகுதி. வயது. நிரந்தர முகவரி போன்ற விவரங்களை இணைத்து இரவுக்காவலர் பணி விண் ணப்பம் என்று குறிப்பிட்டு மாவட்ட ஆட்சிய ரின் நேர்முக உதவியாளர் (பொது), மாவட்ட ஆடசியர் அலுவலகம். காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு பிப். 24ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் நேரிலோ, பதிவஞ்சல் மூலமா கவோ அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் சாதி, இருப்பி டம், கல்வித்தகுதி, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு கண்டிப்பாக ஆதாரம் இணைக்க வேண்டும். விண்ணப்பப் படிவம் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.