கடலூர், ஜூலை 30- கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 10 இளைஞர்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதா வது: தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் தேர்விற்கான ஆள் சேர்ப்பு தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் 2017, 18, 19ஆம் ஆண்டுகளில் நடைபெற்றது. இத்தேர்வில் பங்கேற்று பல்வேறு நிலைகளில் தேறியவர்களுக்கு பணியாணை வழங்கும் முன்பு அவர்களின் குற்றப் பதிவேடு ஆரா யப்படும். அதில், சிறிய வழக்குகளில் தொடர்பு டையவர்களாக கருதப்பட்டு கடலூர் மாவட்டத் தில் சுமார் 50 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை.
பெரும்பாலானவர்கள் நீதிமன்றம் சென்று குற்றமற்றவர் என்பதை நிருபித்துள்ளோம். நீதிமன்றங்களும் வழக்கிலிருந்து விடுதலை செய்துள்ளது. மேலும், சென்னை உயர்நீதிமன்றம் சென்றும் முழுமையான விடுதலைப் பெற்றுவந்தோம். இந்த ஆணையை தேர்வாணையத்தில் வழங்கி னால் ஏற்றுக்கொள்வதில்லை. கடலூர் மாவட்டத் தில் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் முதல் தலைமுறை யாக அரசுப்பணிக்கு செல்வோர். எனவே நீதி மன்ற உத்தரவின் அடிப்படையில் பணி வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.