tamilnadu

img

அடிப்படை வசதி கோரி மாதர் சங்கம் மனு

சிதம்பரம், பிப்.17- சிதம்பரம் நகர இந்திய ஜனநாயக மாதர் சங்க நகரs செயலாளர் மல்லிகா, தலைவர் அமுதா ஆகியோர் தலைமையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அண்ணாமலை நகர் பேரூ ராட்சி செயல் அலுவலருக்கு மனு ஒன்றை கொடுத்தனர். அதில் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாக்  கடை நீர் தேங்கி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கொசுத்தொல்லை அதிக மாக உள்ளது. குடியிருப்பு களுக்கு முறையாக குடி நீர் விநியோகம் நடை பெறுவதில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.  இவர்களுடன் மார்க் சிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா,  சிஐடியு மாவட்ட இணைச்  செயலாளர் சங்கமேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.