tamilnadu

img

கடலூர் அருகே ஒரு கீரிப்பட்டியா?

உள்ளாட்சி அமைப்பு முறை தமிழ்நாட்டில் கொண்டு வரப் பட்டபோது பட்டியல் இனத்தைச் சார்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் நாற்காலியில் அமரக் கூடாது என்றெல்லாம் சாதிய ஆதிக்க சக்திகள் நிகழ்த்திய அட்டூழி யம் கொஞ்சம் நஞ்சமல்ல.  பிரச்சனைகள் எழுந்த இடங்க ளில் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட, பழங்குடியின உள்ளாட்சி பிரநிதி களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் களத்தில் இறங்கி நேரடியாக போராடியது. நீதிமன்றத்திற்கு சென்றும் நீதியை நிலைநாட்டியது. அந்த வரிசையில் நாட்டார் மங்கலம், பாப்பாபட்டி, கீரிப்பிரிப்பட்டியும் அடங்கும்.  தற்போது கடலூர் மாவட்டத்தில் அதுபோன்ற ஒரு சம்பவம் நடத்தி ருக்கிறது. அதுப்பற்றிய விவரம் வருமாறு:- குமராட்சி ஒன்றியத்தில் உள்ளது சிவபுரி ஊராட்சி மன்றம். இந்த கிராமத்தில் இரண்டாயி ரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கடந்த 50 ஆண்டு களுக்குப் பிறகு இந்த ஊராட்சி மன்றத்தின் தலைவர் பதவி பட்டி யல் சமூகத்தினருக்கு ஒதுக்கப் பட்டது. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அன்புச் செல்வனை மக்கள் ஊராட்சி மன்றத் தலைவ ராக தேர்ந்தெடுத்தனர். இவர் பதவி யேற்றதிலிருந்து முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் மகன் மணிகண்டன் உள்ளிட்ட சாதி ஆதிக்க சக்திகள் சிலர் தொடர்ந்து பல்வேறு வகையிலும் தொல்லை களை கொடுத்து வந்துள்ளனர். சாதிய ஆதிக்க வாதிகள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் செய்ய வேண்டும், ஊராட்சி மன்றத் தலைவர் நாற்காலியில் அமரக் கூடாது. தங்கள் முன்னால் எழுந்து நின்றுதான் பேசவேண்டும் என சாதிய வன்மத்தை கையாண்டு வரு கிறார்கள். இதை மீறினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டலும் விடுத்து வருகிறார்கள். மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் நடந்த சிவபுரி ஊராட்சிமன்றக் கூட்டத்தில் தலைவர் அன்புச் செல்வனை தாக்கியதோடு மட்டுமல்லாமல் கொலை மிரட்டலும் விடுத்துள்ள னர். இதனால் ஊராட்சி மன்றத் தலைவர் தனக்கும் குடும்பத்திற் கும் பாதுகாப்பு கேட்டும், சம்பந்தப் பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியும் முதல்வர், மாவட்ட ஆட்சியர், காவல் துறை மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் புகார் செய்திருக் கிறார்கள். இது குறித்து அன்புச்செல்வனி டம் பேசியபோது அவர் கூறிய தாவது:- இந்த ஊராட்சியிலுள்ள 5 குளத்திற்கான ஏலம் இம் மாதம் 11ஆம் தேதி ஊராட்சி மன்ற அலுவல கத்தில் நடைபெற்றது. ஏலத் தொகையை ஊராட்சி மன்றத் தலை வர் எப்படி முடிவு செய்யலாம் என மணிகண்டனும் அவரது ஆதர வாளர்களும் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் புகுந்து என் சட்டையை பிடித்து முகம், முதுகில் குத்தியதோடு கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டினர். இந்த ஏலத்தின் நிகழ்வில் கலந்துகொண்ட மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் அருளானந்தம் ஊராட்சி மன்றத் தலைவருக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது என்று தெரிவித்தபோதும் அவர் முன்னிலையிலேயே என்னை தாக்கினார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் அருகிலிருந்து ஊர் மக்கள் அந்த கும்பலை வெளியே இழுத்துச் சென்றதால் நான் உயிர் பிழைத்தேன்.  ஒரு ஊராட்சி மன்றத் தலைவரை ஊர் மக்கள் முன்னிலையில் தாக்கி யதும், பட்டியல் இனத்தை சேர்ந்த வன் என்பதால் கீழ்த்தரமான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. மேலும் இது குறித்து சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.  கிராம மக்கள் எனக்கு ஆதர வாக உள்ளதால் இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு கும்பல் மட்டும் நாங்கள் என்ன சொல்கி றோமோ அதைத் தான் செய்ய வேண்டும். நாங்க காட்டுகிற இடத்தில்தான் நீ கையெழுத்து போட வேண்டும். நாங்கள்தான் ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கவனிப்போம் என்று சாதிய அடக்கு முறையுடன் நடந்து கொள்கி றார்கள்.  இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பி உள்ளேன். உரிய நடவடிக்கை இல்லை என்றால் எனது பதவியை ராஜினாமா செய்யவும் முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அன்புச் செல்வன் தெரிவித்தார்.