சிதம்பரம், அக. 4- கடலூர் மாவட்டம் சிதம்ப ரம் நகரத்தில் ஒன்பதுக்கும் மேற்பட்ட தீர்த்தங்கள் உள்ளது. இந்த குளங்களில் கடந்த சில ஆண்டுகளாக கழிவுகள் அதிகம் தேங்கி யுள்ளது. இதனால் மழைக் காலங்களில் மழைநீர் குளங் களில் தொடர்ந்து நிற்காமல் வடிந்து விடுகிறது. எனவே அனைத்து குளங்களையும் தூர்வாரவேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இத னைதொடர்ந்து சிதம்ப ரத்தில் உள்ள குளங்கள் அனைத்தையும் தூர்வாரும் பணிகள் சிதம்பரம் நக ராட்சி சார்பில் தீவிரமாக நடை பெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாகச்சேரி குளம் தூர்வாரும் பணி வியாழ னன்று நடைபெற்றது. இதனை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் கலந்துகொண்டு குளம் தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிதம்ப ரம் நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா, ஒப்பந்ததாரர் சண்முகசுந்தரம், சமூக ஆர்வலர் வினோத்குமார் உள்ளிட்ட நகராட்சி அதிகாரி கள் உடனிருந்தனர்.