கடலூர், அக். 16- தீபாவளி முன்பணம் வழங்க வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் கடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து நுழைவுவாயில் போராட்டம் நடத்தினர். கடலூர் பெரு நகராட்சியில் நிதி நெருக்கடியால் துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் பெற வேண்டிய பலன்கள் கிடைக்காமல் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும் 25 ஆண்டுகள் பணி முடித்த 21 துப்புரவு பணியாளர்கள் இரண்டா யிரம் ரூபாய் அரசு வெகுமதி கடந்த மூன்று ஆண்டுகாலமாக வழங்கப்படாமல் நிலுவை வைத்துள்ளனர். பணியாளர்களுக்கு சொசைட்டியில் கட்டவேண்டிய தொகை 10 மாதங்களாக நிலுவை சுமார் இரண்டு கோடி, தீபாவ ளிக்கு முன் பணமாக வழக்கமாக வழங்கப்ப டும் முன்பணம், அக்டோபரில் ஜிபிஎப் வைப்பு நிதி கடன் 2 கோடி, அகவிலைப்படி, ஜனவரி 19 முதல் நான்கு மாதங்களாக நிலுவையில் உள்ளது. சீறுடை, தையல் கூலி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னார்க்காடு மாவட்ட நகராட்சி தொழி லாளர்கள் சங்கம் சார்பில் கடலூர் நகராட்சி அலுவலகம் நுழைவாயிலில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். துப்புரவு பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் மேலும் தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டதால் சம்பளம் கிடைக்காமல் அவதிப்படுகிறோம், உடனடியாக நகராட்சி நிர்வாகம் பணப்பலன்களைப் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். போராட்டத்தில் சங்கத்தின் தலைவர் ந.பக்கிரி, செயலாளர் த.செல்வராஜ், பொரு ளாளர் ப.அரசகுமாரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.