கடலூர், மே 30- கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலை களை பயன்படுத்தி மீன்பிடித்தால் நடவ டிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் எச்ச ரிக்கை விடுத்துள்ளார். வங்கக்கடலோர பகுதிகளில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் 15ஆம் தேதி வரை மீன்களின் இருப்பெருக்கத் திற்காக மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். தற்போது கரோனா தொற்று பரவ லைத் தடுக்கும் வகையில் மார்ச் மாதமே பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் மீன்பிடித் தொழிலும் பாதிக்கப்பட்டது. இத னைக் கருத்தில் கொண்டு நடப்பாண்டில் ஜூன் 1ஆம் தேதி முதலே மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்குள் செல்லலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால், கடலூர் மாவட்டத்தில் ஆழ்கடல்மீன்பிடிப்பில் ஈடுபடும் 250 பெரிய அளவிலான படகுகள், 600 சிறிய அளவிலான படகுகள் மீன்பிடித் தொழிலில் வரும் 1ஆம் தேதி ஈடுபடும் வகையில் ஆயத்தமாகி வரு கின்றன.
இந்நிலையில் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபடுவது முற்றி லும் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் கட லூர் மாவட்டத்தை சேர்ந்த சில மீனவ கிராமத்தி னர்கள் 240 குதிரைத்திறனுக்கு அதிகமான திறன் கொண்ட இயந்திரங்கள் பொருத் தப்பட்ட விசைப்படகுகள் மூலம் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது. அர சால் தடை செய்யப்பட்டும், மாவட்ட நிர்வா கத்தின் நடவடிக்கைக்கு கட்டுப்படாமல் தொடர்ந்து சுருக்குமடி வலையை பயன்ப டுத்தி வரும் மீனவ கிரமத்தினர் மற்றும் சுருக்கு மடி மீன்பிடி படகு உரிமையாளர்கள் உடனடி யாக சுருக்குமடி வலையை பயன்படுத்து வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலை மற்றும் அதிவேகதிறன் கொண்ட இயந்தி ரங்களை பயன்படுத்தினால் படகுகள் மற்றும் வலைகள் பறிமுதல் செய்யப்படும். மேலும் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதுடன், மீன்வளத்துறை மூலம் பெறப்ப டும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.