ஜப்பான் நாட்டிலுள்ள அனிமேஷன் ஸ்டூடியோ ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
ஜப்பானின் க்யோட்டோ, நகரிலுள்ள அனிமேஷன் ஸ்டூடியோவில் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் கடுமையாக கரும்புகை வெளியேறியது. இந்த விபத்துக்கான காரணம் குறித்த முழுமையான தகவல்கள் இதுவரை தெரியவில்லை என க்யோட்டோ நகர போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தீ விபத்தில் சிக்கி பலர் படுகாயமடைந்துள்ள நிலையில், சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தீவிபத்து ஏற்பட்ட பகுதியில் எரிபொருள் போன்ற திரவத்தை ஊற்றியதாக நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தீவிபத்து ஏற்பட்ட 3 அடுக்குகள் கொண்ட கட்டிடத்துக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.