tamilnadu

img

ஈராக்கில் போராட்டக்காரர்கள் மீது மர்ம நபர் துப்பாகிச் சூடு - 19 பேர் பலி

ஈராக்கில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 19க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 

ஈராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள கலானி சதுக்கத்தில் போராட்டக்காரர்கள் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 19க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.