tamilnadu

img

கட்சிப் பத்திரிகை லங்கால் - கணவாணியானது- முசாபர் அகமது

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி சட்ட விரோதமாக்கப் பட்வில்லையென்றாலும், அதன் பெயரில் வெளிப்படையாகச் செயல்படுவது கஷ்டமாகவே இருந்தது.

பல்வேறு இடங்களிலுள்ள கம்யூனிஸ்ட்டுகளை ஒன்று சேர்த்து நாங்கள் கான்பூரில் முதலாவதாக ‘கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா’ (இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி) வின் ஒரு மத்தியக்கமிட்டியை அமைத்தோம். மாநாடு பகிரங்கமாக நடந்தது. அதனால் மத்திய கமிட்டியும் பகிரங்கமாகவே உருவாக்கப்பட்டது.  இதன்பேரில் நாட்டிற்குள்ளும், வெளியிலுமிருந்து வந்த ஏராளமான விமர்சனங்களை நாங்கள் எதிர்நோக்க நேர்ந்தது. இந்த விமர்சனங்களுக்கு நாங்கள் தகுதி உடையவர்கள் தாம். ஆனால் எங்களுக்கு வேறுவழி கிடைக்கவில்லை என்பதையும் மறக்கக்கூடாது. கான்பூர் மாநாட்டில் நாங்கள் கலந்து கொண்டிருக்கவில்லையெனில் சத்யபக்தாவின் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்காலத்தில் எங்களது நடவடிக்கைகளை பெருமளவில் தடுத்திருக்கும்.  கான்பூர் மாநாட்டைத் தொடர்ந்து கொஞ்சகாலம்வரை மௌலானா ஹஜ்ரத்மொஹானி எங்களோடு சேர்ந்து நின்றார். அவர் பிரபலமான உருது கவிஞராகவும், சுதந்திரப்போராட்டத்தில் முன்னணி வீரராகவும் திகழ்ந்தார். பலமுறை அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஏராளமான கொடுமைகளையும் ஏற்றிருக்கிறார். காங்கிரசின் அலகாபாத் மாநாட்டில் முழு சுதந்திரத்திற்கான தீர்மானத்தை அவர் முன்வைத்தார். இந்தத் தீர்மானத்தைப் பிரதிநிதிகள் நிராகரித்தனர். இந்தத் தீர்மானத்தைச் முன்வைத்த காரணத்திற்காக அவர் மீது செஷன்ஸ் நீதிமன்றம் விசாரணை நடத்தி அவருக்கு ஆயுள் முழுவதும் சிறையிலிருக்கும் தண்டனை விதித்தது. எனினும், பம்பாய் உயர்நீதிமன்றம் அந்தத்தண்டனையை ரத்துசெய்தது. அவர் 1927-ல் கட்சியை விட்டு விலகி முஸ்லீம் லீகில் சேர்ந்தார். அவர் முஸ்லிம்லீகில் சேர்ந்ததை நாங்கள் ஆதரிக்கவில்லை. எனினும் காங்கிரஸின் பெருந்தலைவர்கள், 1928 ஜனவரியில் கல்கத்தாவில் கூடிய முஸ்லிம் லீக் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

கூட்டுச் செயலாளர்கள்
கான்பூரில் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டியை உருவாக்கியபோது எஸ்.வி.காட்டே, ஜானகி பிரசாத், பாகர் ஹட்டா ஆகியோர் அதன் கூட்டுச் செயலாளர்களாயினர்.  1927-ல் ஜானகி பிரசாத்தின் நடவடிக்கையின் மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதற்குப் போதிய காரணங்களும் இருந்தன. இனிமேல் தம்மீது எங்களுக்கு நம்பிக்கை ஏற்படாது என்பதை உணர்ந்தபோது ஜானகி பிரசாத் தாமாகவே எங்களிடமிருந்து போய்விட்டார்.

 பொதுச் செயலாளர்
அதற்குப்பின்னர் எஸ்.வி.காட்டே கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். 1929 மார்ச் 20 வரை அவர் இந்தப் பதவியில் நீடித்தார். சிறிது காலத்திற்குப் பிறகுஅவர் மீண்டும் கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1926முதல் 1929 ஜனவரி வரை மத்தியக் கமிட்டியின் ஏராளமான இரகசிய கூட்டங்கள் நடந்தன. சில ஆண்டுகளில் மத்தியக் கமிட்டி நான்கு முறைகள் கூட கூடியிருக்கிறது. 1928அக்டோபரில் பம்பாயில் கூடிய மத்தியக்கமிட்டி கூட்டத்தை ‘யுத்தக்குழு’ என்று எதற்காக மீரத்செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டாரென்பது எனக்கு தெரியவில்லை. 1928-ல் கட்சிக்காக ஓர் அமைப்புச்சட்டம் உருவாக்கப்பட்டது.

‘தொழிலாளர்கள் - விவசாயிகள் கட்சி’
இங்கு, தொழிலாளர்கள், விவசாயிகள் கட்சியைப்பற்றி சிலவற்றை சொல்வது அவசியம். நான் 1923-ல் கைது செய்யப்பட்டபிறகு 1926 ஜனவரி 2-ல் கல்கத்தாவுக்குத்திரும்பினேன். நான் கல்கத்தாவுக்குத் திரும்பி வருவதற்கு முன்பு அங்கு ஒரு கட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்திய தேசியக் காங்கிரஸின் லேபர் ஸ்வராஜ் கட்சி என்ற பெயரில் அது அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தக் கட்சியின் சார்பில் ‘லங்கால்’ என்றொரு வார இதழ் வெளியிடப்பட்டது. இக்கட்சியின் முதலாவது இதழில் நஸ்ருல் இஸ்லாமின் பிரசித்திபெற்ற ‘சாம்யவாதி’ என்னும் கவிதையொன்று வெளியிடப்பட்டது. இந்தக் கவிதை ரஷ்ய மொழியில் கூட மொழி பெயர்க்கப்பட்டிருந்தது என்பதைக் கேள்விப்பட்டேன். நான்கு நண்பர்கள் முன் முயற்சி செய்ததுதான் “லேபர் ஸ்வராஜ்’’ கட்சி உருவாக்கப்பட்டது. இரண்டு நண்பர்களின் பெயர்களை ஏற்கனவே நான் குறிப்பிட்டிருக்கிறேன். ஹேமந்தகுமார் சர்க்கார், சம்ஸுதீன்ஹுசேன் ஆகியோர் ஏனைய இருவர். கடைசியாகக் குறிப்பிட்ட நண்பர் அப்துல் ஹலீமின் சகோதரர். 1926 பிப்ரவரியில் கிருஷ்ணா நகரில் (நாடியா மாவட்டம்) விவசாயிகளின் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் லேபர் ஸ்வராஜ் கட்சியின் பெயரை ‘பெஸண்ட்ஸ் அண்ட் ஒர்க்கர்ஸ் பார்ட்டி’ (விவசாயிகள் - தொழிலாளர்கள் கட்சி) என மாற்றினர். இனிமேல் இந்திய தேசியக் காங்கிரஸின் கீழ் இக்கட்சி செயல்படாது என்பதுதான் இதன் பொருள். கிருஷ்ணாநகர் மாநாட்டில் விவசாயிகளின் பிரதிநிதிகள் அதிகம்பேர் வந்திருந்ததால் கட்சிப்பெயரின் ஆரம்பத்தில் ‘ஒர்க்கர்ஸ்’ என்பதைச்சேர்க்க முடியவில்லை. எனவேதான் ‘பெஸண்ட்ஸ்’ என்பது முதலில் வந்தது. ஆனால் அடுத்து நடைபெற்ற மாநாட்டில் இந்தப் பெயர் ‘ஒர்க்கர்ஸ் அண்ட் பெஸண்ட்ஸ்’ என மாற்றப்பட்டது. படிப்படியாக நான் கட்சியின் ‘லங்கால்’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் ஓர் உறுப்பினனானேன். இந்தச் சமயத்தில் பத்திரிகையின் பெயர் ‘கணவாணி’ என மாற்றப்பட்டது. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி சட்ட விரோதமாக்கப் பட்வில்லையென்றாலும், அதன் பெயரில் வெளிப்படையாகச் செயல்படுவது கஷ்டமாகவே இருந்தது.

தொழிலாளர்கள் - விவசாயிகள் கட்சியின் மாநாடு
கம்யூனிஸ்ட் கட்சி நிறைவேற்றிய தீர்மானங்கள் உண்மையில் தொழிலாளர்கள் - விவசாயிகள் கட்சியின் மூலம் செயல்படுத்தப்பட்டன. இந்தக் கட்சியின் துண்டுப்பிரசுரங்கள் அனைத்தையும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்கமிட்டி தான் தயாரித்தது. வங்கத்தில் தொழிலாளர்கள் - விவசாயிகள் கட்சியில் கம்யூனிஸ்ட் அல்லாதவர்கள் தான் அதிகம் பேர்.ஆனால், அதனால் எங்களது நடவடிக்கைகளுக்கு ஒரு கஷ்டமும் ஏற்படவில்லை.

கான்பூர் மாநாட்டைத் தொடர்ந்து கொஞ்சகாலம்வரை  மௌலானா ஹஜ்ரத்மொஹானி எங்களோடு சேர்ந்து நின்றார். அவர் பிரபலமான உருது கவிஞராகவும், சுதந்திரப்போராட்டத்தில் முன்னணி வீரராகவும் திகழ்ந்தார்.