திருவண்ணாமலை, நவ. 2- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த வடாமதிமங்கலம் அருகே உள்ளதுஆலபூண்டி கிராமம். இங்கு 700க்கும் மேற்பட்டமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விவசாயம் செய்கின்றனர். ஆலபூண்டி கிராம மக்க ளுக்கு மயானம் சுமார் 75 செண்டு பரப்பளவில் உள் ளன. ஆனால் மயானத்திற்கு செல்லும் பாதை இல்லாமல் கடந்த 3 தலைமுறைகளாக அதாவது 100 ஆண்டுக்கு மேலாக தவிக்கின்றனர். ஆலன்பூண்டி கிரா மத்தை சேர்ந்த சாரதம்மாள் (75) உடல் நிலை சரியில்லா மல் சனிக்கிழமையன்று (நவ.2) இறந்துவிட்டார். அவ ரது சடலத்தை உறவினர் கள் மற்றும் கிராமத்து பொது மக்கள் விவசாய நிலம் வழியாக சிரமத்துடன் கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.
கடந்த 3 தலைமுறைக ளாக சடலத்தை சுமந்து செல்பவர்கள் படும்பாடு சொல்லி மாளாது. இது சம்மந்தமாக பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இந்த பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உடனடியாக மயான பாதையை அமைத்து கொடுக்க ஆலபூண்டி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.