tamilnadu

img

திருமண உறவுகளுக்குள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை ஏன் குற்றமாக கருதப்படவில்லை

கனிமொழி எம்.பி கேள்வி

சென்னை, டிச. 14- திருமண உறவுகளுக் குள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஏன் குற்றமாகக் கருதப் படவில்லை என கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் சனிக் கிழமை (டிச.14) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியா ளர்களிடம் பேசிய கனி மொழி, “பெண்களுக்கு எதி ரான குற்றங்கள் இந்தியா முழுவதும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. ஐதரா பாத்தில் பெண் ஒருவர் பாலி யல் வன்முறைக்கு உள்ளாக்  கப்பட்டு எரித்துக் கொல்லப் பட்டிருக்கிறார். உன்னாவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் நீதிமன்றத்  திற்குச் செல்லும் வழியில்  எரித்துக் கொல்லப்பட்டி ருக்கிறார். தமிழ்நாட்டில் பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடையவர்கள், ஆதா ரம் இல்லை எனக்கூறி விடு விக்கப்பட்டிருக்கும் மோச மான நிலை உள்ளது.

ஆனால், நிர்பயா நிதியை எப்படி செலவழிப்பது என  தங்களுக்குத் தெரிய வில்லை என்று சொல்லக் கூடிய அரசு தமிழகத்தில் உள்ளது. தெருக்களில் மின்  விளக்குகள் இல்லை, சிசி டிவி கேமராக்கள் இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் அளவுக்கு போதுமான நீதிமன்றங்கள் இல்லை.

அப்போது, திருமண உறவுக்குள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடு மைகள் குறித்த கேள்விக்கு, “திருமணத்திற்குள் பெண்  கள் பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாவதில்லை என நாம் சொல்ல முடியாது,. கணவன் - மனைவிக்குள்ளே பாலியல் வன்முறைகள் நடக்  கின்றன. ஆனால், இவை  இந்தியாவில் இன்றுவரை  குற்றமாக ஏற்றுக்கொள்ளப் பட வில்லை. ஆனால், பல  நாடுகளில் திருமணத்திற் குள் நடக்கும் பாலியல் வன்  முறைகள் குற்றமாகக் கருதப்  படுகிறது, தண்டிக்கப்படு கின்றனர். இந்தியா ஏன் இத னைக் குற்றமாகக் கருத வில்லை என புரியவில்லை. நானும் இதுகுறித்து தனி நபர் மசோதா கொண்டு வந்தி ருக்கிறேன். விரைவில் இந்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என  எதிர்பார்க்கிறேன்” என கனி மொழி தெரிவித்தார்.

பாலியல் வன்கொடுமை களில் திரைத்துறைக்குள்ள பங்கு குறித்த செய்தியா ளர்களின் கேள்விக்கு, “எல்  லோருக்கும் ஒரு பொறுப்பு ணர்வு வேண்டும். எல்லா  குற்றங்களுக்கும் பெண் களை குற்றவாளியாக்கும் சூழ்நிலை உள்ளது. பெண் களைப் பின்தொடர்ந்து தொந்தரவு செய்வது தவ றில்லை என்ற விஷயங்கள் தொடர்ச்சியாக திரைப் படத்தில் காட்டப்படுகின்றன. எல்லோருக்கும் பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். வன்முறையைப் பெண்கள் மீது ஏவுவது தவறு என்பதை எல்லா ஊடகங்களும் புரிந்துகொள்ள வேண்டும். சமூகம், கல்வி நிறுவனங்கள் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆண்-பெண் சமம் என்பதைப் பாடத்திட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்றார் அவர்.