மதுரை, டிச.10- மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப் பினர் பி.டி,ஆர். பழனிவேல் தியாகராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிறைவு பெற்ற பணிகளை செவ்வாயன்று தொடங்கி வைத்தார். மதுரைஆரப்பாளையம் ஏ.ஏ.ரோடு பூங்கா நகரில் ரூ.8.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டடத்தை திறந்து வைத்தார். தமிழர்கள் வரலாற்றை குழந்தைகள் தெரிந்து கொள்ளும் வகையில் கீழடி மாதிரி ஓவியங்கள் அங்கன்வாடி கட்டடங்கள் முழுவதும் வரையப்பட்டுள்ளன. அருள்தாஸ்புரத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் நவீன சலவைக் கூடம் அமைப்பதற் கான கட்டுமானப் பணியையும் பி.டி.ஆர்.பழனி வேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.