மதுரை, ஏப்.18- தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கத்தின் முன்னாள் மாநிலத் தலை வரும் ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவரும் அனைத்துறை ஓய் வூதியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவருமான மு.சுப் பிரமணியனின் தாயார் எம்.செல்லம்மாள் சனிக் கிழமை மதுரையில் காலமானார். அவருக்கு வயது 79. அவரது உடலுக்கு சங்கத்தின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். சனிக்கிழமை மாலை இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. அன்னாரது மறைவிற்கு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க மாநிலத் தலை வர் மு.பாரி, பொதுச்செயலாளர் ரமேஷ், மதுரை மாவட்டச் செயலாளர் அ.பாலாஜி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.