சென்னை, மார்ச் 25- சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது 10 மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அத்தியாவசிய பணிகளில் ஈடு பட்டுள்ள மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும் கண்டிப்பாக அடையாள அட்டையை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் கேட்கும்பொழுது காட்ட வேண்டும் என்றும் கூறினார்.
மாநகரப் பகுதிகளில் காவல்துறை யினருடன் மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் அவர்கள் கூறும் அறிவு ரைகளை மக்கள் கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும். அதை மீறி வெளி யில் சாலைகளில் சுற்றுவோர் மீது நட வடிக்கைகள் கடுமையாக எடுக்கப்ப டும் என்றும் எச்சரித்தார். சென்னை அருகே பூந்தமல்லியில் ஒருவர் இறந்துவிட்டதாக கூறியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில ளித்த அவர் இது வதந்தி என்றும் தவ றான தகவலை பரப்பிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் மக்களுக்கு தேவையான தகுந்த பாது காப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக செய்து தரப்பட்டு வருவ தாகவும் விஸ்வநாதன் கூறினார்.