சென்னை, பிப். 19 - மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை கேட்டு அரசு போராடினால் இணைந்து போராட எல்லோரும் தயாராக இருக்கிறோம் என்று காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் ராமசாமி கூறினார். 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கே.ஆர். ராமசாமி பேசுகையில், “சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 150 கிராமங்களை சேர்ந்தவர்க ளுக்கு பயிர்க் காப்பீடு திட்டத்தில் நிவாரணம் கிடைக்கவில்லை” என்றார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர், “இது குறித்து உரிய அதிகரிகள் மூலம் ஆய்வு செய்து நிவாரணம் கிடைக்காதவர்களுக்கு கிடைக்க நடவ டிக்கை எடுக்கப்படும் ”என்றார்.
தொடர்ந்து பேசிய ராமசாமி, திருபுவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு 2 முறை தேர்தல் அறி விக்கப்பட்டும் கைவிடப்பட்டுள்ளது. அதனை விரைவில் நடத்திட வேண்டும். மத்திய அரசுடன் தமிழக அரசுக்கு உள்ள நெருக்கத்தை பயன்ப டுத்தி மாநிலத்திற்கான தேவையான நிதியை கேட்டு பெறாமல் இருப்பது தமிழகத்திற்கு செய்யும் துரோம் என்றார். அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர், அமைச்சர் களும், நிதித்துறை மூலமாகவும் மத்திய அரசை நிதி கோரி வலியுறுத்தி வருகிறோம். மானியக் கோரிக்கைகள் நிறைவேறியதும் உள்ளாட்சி களுக்கான நிதி விடுவிக்கப்படும் என்றனர். கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புகள் குறித்து ராமசாமி எழுப்பி கேள்விகளுக்கு பதிலளித்த முதல மைச்சர், கோவில் நிலங்களை தனியாருக்கு கொடுப்பதில்லை. அரசின் அத்தியாவசிய பணி களான சாலை விரிவாக்கம், துறைக் கட்டிடம் போன்ற வற்றிற்கு நிலம் தேவைப்படும் போது சந்தை மதிப்பை விட கூடுதல் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தப்படுகிறது. இதனால் அறநிலையத் துறைக்கு எந்த நட்டமும் இல்லை என்றார்.