சென்னை,மார்ச் 10- தமிழகத்தில் ஒருவர் மட்டுமே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள தாகவும், அவரும் மருத்துவர்களின் முயற்சி யால் நலமுடன் இருப்பதாகவும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவ மனையில், பயிற்சி மருத்துவர் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்களுக்கான குடியிருப்பு கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர், “கொரோனா வைரஸ் தொடர் பாக 1,132 பேர் மாநில அரசின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்” என்றார்.