தருமபுரி, ஜூலை 31- கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால் கர்நாடக அணை களுக்கு அதிக அளவு தண்ணீர் வந்த நிலையில் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலை யில் பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதி காரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஒகேனக் கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கன அடி யாக இருந்தது. மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப் பரித்துக் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் வருகை யும் அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி 9-வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 900 கன அடியாக இருந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 9 ஆயிரத்து 200 கன அடியாக வந்துகொண்டிருக்கிறது. அணை யில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் வரத்தை விட நீர் திறப்பு குறைவாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நீர்மட்டம் கடந்த 9 நாட்களில் 8 புள்ளி 54 அடி உயர்ந்து 47.67 அடியாக உள்ளது. அடுத்த டுத்த நாட்களில் இதே அளவு தண்ணீர் வந்தால் 3 நாட்களில் அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.