tamilnadu

img

13 ஆயிரம் பள்ளிகளில் தேர்தல் கல்வி அறிவு குழுக்கள்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

வேலூர், நவ.23- நாடு முழுவதும் பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு சத வீதத்தை அதிகரிக்கும் வகையில் மாணவர்களிடையே விழிப்புண ர்வு ஏற்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதி யாக தமிழகத்தில் உள்ள பள்ளிக ளில் “தேர்தல் கல்வியறிவு குழுக்கள்” அமைக்கப்பட்டு ள்ளது. குழுவில் இடம்பெறும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட பயிற்றுநர்களுக்கான பயிற்சி வகுப்புகள் வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடை பெற்றது. இதில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்த ரம் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியில் தேர்தல் பணி யில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் விழிப்புணர்வு பாடல்களை பாடினர்.  பிறகு, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,“இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, தமிழகத்தில் ஒவ்வொரு உயர் மற்றும் மேல் நிலைப்பள்ளிகளி லும் தேர்தல் கல்வி அறிவுக்குழு க்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என்றார்.

உயர்நிலைப்பள்ளிகளில் 5796, மேல்நிலைப்பள்ளிகளில் 7809 என மொத்தம் சுமார் 13,000 பள்ளிகளில் இந்த குழுக்கள் ஆரம்பித்துள்ளோம். இவர்களுக்கு பயிற்சி அளிப்ப தற்காக கோவை, திருச்சி, வேலூர் மதுரை ஆகிய 4 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு பயிற்றுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று, நாம் ஏன் வாக்காளர் பட்டி யலில் இணைய வேண்டும்? தேர்தல் என்றால் என்ன? என்பது குறித்து மாணவர்களு க்கு விழிப்புணர்வு ஏற்படுத்து வார்கள். இதை கேட்டு மாண வர்கள் தங்கள் பெற்றோர்களிடம் கொண்டு சேர்ப்பார்கள். அதற்காக தான் இந்த பயிற்சி வகுப்பு துவங்கியுள்ளது என்றும் அவர் கூறினார். வேலூர், சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ண கிரி, தருமபுரி, திருவண்ணா மலை ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 100 பேர் பயிற்சி வகுப்பில் பங்கேற்றுள்ளனர். எனவும் அவர் மேலும் தெரி வித்தார்.