எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு
சென்னை, மார்ச் 11- தேசிய மக்கள் தொகை பதி வேடுக்கு (என்.பி.ஆர்.)எதிராக தீர்மானம் நிறை வேற்றாததை கண்டித்து திமுக,காங்கிரஸ், முஸ்லீம் லீக், மனிதநேய ஜன நாயக கட்சி உறுப்பினர்கள் தமி ழக சட்டப்பேரவையி லிருந்து வெளிநடப்பு செய்தனர். பேரவையில் புதனன்று (மார்ச் 11) கேள்வி நேரம் முடிந்த தும் பேசிய எதிர்க் கட்சித் தலை வர் மு.க.ஸ்டாலின், 2019 ஆம் ஆண்டின் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பின்னனியில் எடுக்கப் படும் என்பிஆர் கணக்கெடுப்பு குறித்து சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் அச்சத்தில் இருக்கி றார்கள். தற்போது உள்ள என்பிஆர் படிவத்தில் கேட்கப்ப டும் கேள்விகள் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கி றது” என்றார்.
என்பிஆர் படிவத்தில் உள்ள சில கேள்விகளை தவிர்க்குமாறு மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம் எழுதியிருப்பதாக கூறப் பட்டது. அதன் நிலை என்ன? என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார். குடியுரிமை திருத்தச் சட் டத்தை ஆதரித்து வாக்களித்த பாஜக கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம், ஓய்எஸ் ஆர் காங்கிஸ், தெலுங்கான ராஷ்ட்ரி சமிதி போன்ற அந்த அந்த மாநில மக்களின் விருப் பதை உணர்ந்து தங்களுடைய நிலையை தற்போது மாற்றிக் கொண்டிருக்கின்றன. 2010 ஆம் ஆண்டின் மக்கள் தொகை அடிப்படையில்தான் என்பிஆர் கணக்கெடுப்பு நடத்த வேண்டும், என்ஆர்சி கிடையாது என்றும் பீகார் பேரவையில் நிறைவேற்றப் பட்டுள்ளது. ஆந்திரா முதல்வ ரும் அமைச்சரவையில் தீர்மா னம் நிறைவேற்றியிருக்கிறார். தெலுங்கான முதலமைச்சர், “ எனக்கே பிறந்த சான்றிதழ் இல்லை” என்றும் எனவே சட்ட மன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற் றப்படும் என்றும் தெரிவித்தி ருக்கிறார். எனவே, தமிழ்நாட்டி லும் என்பிஆர் சட்டத்தை நிறை வேற்ற மாட்டோம் என்று அமைச் சரவை மற்றும் சட்டப்பேர வையில் தீர்மானத்தை சிறை வேற்ற வேண்டும் என்று ஸ்டா லின் வலியுறுத்தினார்.
இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி உறுப்பினர் அபுபக்கர், “நாடெங்கிலும் குடியுரிமை திருத்தச் சட்டம், என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 13 மாநிலங்களில் எதிராக தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன. தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகி றோம். இந்த சட்டங்கள் மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடை யதுதான். இதனால்தான் அனைத்து தரப்பு மக்களும் அச்சதில் உள்ளனர்” என்றார்.
தமிமுன்அன்சாரி, “மத்திய பாஜக அரசு கொண்டுவந்தி ருக்கும் இந்த சட்டம் எல்லா மக்க ளுக்கும் பாதிப்பை ஏற்படுத்து கிறது. இதை தெலுங்கான முதல்வரே ஒப்புக்கொண்டி ருக்கிறார். எனவே, கேரளா, பீகார் அரசைகளைப்போன்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்றார். இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் உதயகுமார், “திமுக அங்கம் வகித்த மத்திய பாஜக அரசுதான் 2010 ஆம் ஆண்டில் இந்த என்பிஆர், என்ஆர்சி சட்டத்தை கொண்டு வந்தது. எனவே, இதில் சிறுபான்மை மக்கள் உள்ளிட்ட யாரும் அச்சப் படத் தேவையில்லை. ஆவ ணங்கள் எதுவும் கேட்கப்பட வில்லை. ஆவணங்கள் எதை யும் சரிப்பார்க்க தேவை யில்லை” என்றார். தேசிய மக்கள் தொகை பதி வேடுக்கு (என்.பி.ஆர்.)எதிராக தீர்மானம் நிறை வேற்றாததை கண்டித்தும், அமைச்சர் கூறிய பதில் திருப்தி அளிக்கவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் தலை மையில் திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளி நடப்பு செய்தனர். அதை தொடர்ந்து காங்கி ரஸ், முஸ்லிம் லீக், கட்சி உறுப்பி னர்களும் வெளி நடப்பு செய்த னர்.