tamilnadu

img

பசியால் அழுகிற குழந்தைகளுக்கு கிலுகிலுப்பை: முதலமைச்சர் உரை குறித்து சிபிஐ விமர்சனம்

சென்னை, மே 6- முதலமைச்சரின் தொலைக் காட்சி உரை பசியால் கதறி அழு கிற குழந்தையிடம் கிலுகிலுப்பை  ஆட்டுவதாக இருந்ததாக இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் விமர்சனம் செய்திருக்கிறார். இது குறித்து அவர் வெளி யிட்ட அறிக்கையில், “முதல மைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொலைக்காட்சியில் உரை யாற்றுகிறார் என பரபரப்பாக விளம்பரம் செய்யப்பட்டது.

கோவிட் 19 நோய் பெருந் தொற்று பரவல் தடுப்புக்காக நாடு முடக்கம் செய்துள்ள நிலை யில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதி அறி விப்பார் என ஆவலுடன் எதிர்  பார்த்து தொலைக்காட்சி முன் காத்திருந்த மக்களுக்கு முதல மைச்சர் உரை பெருத்த ஏமாற்றம்  அளிக்கிறது” என்று குறிப்பிட்டி ருக்கிறார். தலைநகர் சென்னையிலும், அதன் சுற்று வட்டார மாவட்டங்க ளிலும் கோவிட் 19 நோய் தொற்  றால் பாதிக்கப்படுவோர் அதிக ரித்து வரும் நிலையில், வீட்டுக்  குள் 40 நாள்களாக முடங்கி கிடக்கும் மக்கள் உணர்வுகளை  முதலமைச்சர் பிரதிபலிக்க வில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

மதுபானக் கடைகளை திறக்கும் அரசின் முடிவை ரத்து  செய்ய வேண்டும் என அரசியல்  கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் வலியுறுத்தி வரும் நிலையில், அது குறித்து முதலமைச்சர் வாய் திறக்காதது மக்கள் நலனைக் காட்டிலும், மது ஆலைகளின் லாப வேட்  டையை பாதுகாப்பது முதன்மை ஆகிவிட்டது. அரசுக்கு வருவாய் தேட மக்கள் உயிர்களை பலியிட வும்  தயாராகிவிட்டதை முதல மைச்சர் மௌனம் வெளிப்ப டுத்துகிறது. மொத்தத்தில் ‘பசியால் கதறி  அழுகிற குழந்தையிடம் கிலு கிலுப்பை உலுக்கிய முதல மைச்சர்’ உரையால் எந்தப் பய னும் இல்லை என்பதையும் முத்தர சன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.