சென்னை,நவ.2- முதலமைச்சர் வீட்டருகிலேயே மலை போல குப்பைகள் குவிந்துள்ள நிலையில், மற்ற இடங்கள் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பார்க்க முடிவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந் தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், குப்பைகள் அகற்றப்படாததால் தான் டெங்கு நோய் பரவுவதாகக் குறிப்பிட்டனர். முதலமைச்சர் வீட்டுக்கு அருகில் மலைபோல குப்பைகள் குவிந்து கிடப்ப தாகவும், முதலமைச்சர் வீட்டருகிலேயே இந்த நிலை என்றால், மற்ற இடங்கள் எப்படி இருக்கும் என கற்பனை செய்ய முடிவ தாகவும் கூறினர். பின்னர், டெங்கு காய்ச்சலை தடுக்க எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.