tamilnadu

img

கல்லூரிகளுக்கு புதிதாக உதவி பேராசிரியர்கள்

சென்னை,ஆக.9- தமிழகத்தில் அரசு கலை அறிவியல்  கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரி களுக்கு புதிய உதவிப் பேராசிரியர்கள் நியமிக்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு கலை அறி வியல் கல்லூரிகளில் 2500க்கும் மேற்பட்ட  காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த  காலிப் பணியிடங்களுக்கு ஆண்டுதோறும்  11 மாதங்களுக்கு மட்டும் தொகுப்பூதி யத்தில் உதவிப் பேராசிரியர்கள் பணிய மர்த்தப்படுகின்றனர். 11 மாதங்களுக்குப் பின் நியமனம் மீண்டும் மாற்றியமைக்கப்படுகிறது. அந்த  வகையில் இந்த ஆண்டு 2,653 இடங்க ளுக்கு கல்லூரிகள் அனுமதி கோரிய நிலையில், 2,120 இடங்களுக்கு அனுமதி அளித்து உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி 15 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் 2,120 உதவிப்  பேராசிரியர்களை கல்லூரிகளே நிய மித்துக்கொள்ள அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. 11 மாதங்களுக்கு, 2,120  உதவிப் பேராசிரியர்களுக்கு தொகுப்பூதி யம் வழங்க 34 கோடியே 98 லட்சம் ரூபாய்  நிதி ஒதுக்கீடு செய்தும் உத்தர விடப்பட்டுள்ளது.