tamilnadu

img

கொரோனா தொற்றை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு உதவி

சென்னை, ஏப். 28- கொரோனா தொற்று பரவாமல் இருக்க நாள்தோறும் சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரை கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க  ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி குடைகளை விநியோகித்து வருவதோடு, நிழற்குடைகளை  நிறுவியும் வருகிறது.

தொற்றுநோய்க்கு எதிரான நடவடிக்கை களில் இந்தியாவுக்கு உதவும் நோக்கத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.  மேலும், நாடு முழுவதும் உதவிகள் தேவைப்படு  பவர்களுக்கு மளிகை சாமான்கள், முகக்கவ சங்கள் மற்றும் கை கழுவும் திரவங்கள் ஆகிய வற்றை வழங்கி, அவர்கள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதிப்ப டுத்தும் வகையில் உதவி வருவதாக வங்கியின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.