சென்னை,அக்.25- விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளிலிருந்து தேர்வு செய்யப் பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் இரு வரும் வரும் 29ஆம் தேதி பதவியேற்றுக் கொள்கின்றனர். விக்கிரவாண்டி தொகுதியின் அதி முக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனும், நாங்குநேரி தொகுதியின் அதிமுக வேட்பாளர் நாராயணனும் வெற்றி பெற்றனர். இருவரும் வரும் 29ஆம் தேதி எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொள்கிறார்கள் என்றும் பேரவைத் தலைவர் தனபால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார் என்றும் தகவல் கள் வெளியாகியுள்ளன.