தென் அமெரிக்க நாடுகளின் உலகக்கோப்பை கால்பந்து என அழைக்கப்படும் கோபா அமெரிக்கா தொடர் சமீபத்தில் நிறைவு பெற்றது. இந்த தொடரின் மூன்றாம் இடத் திற்கான ஆட்டத்தில் அர்ஜெண்டினா சிலியை 2-1 என்ற கோல்கணக்கில் போராடி வீழ்த்தியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா வின் நட்சத்திர வீரர் மெஸ்சி சிலி வீரர் மெடலை தலையால் முட்ட முற்பட்ட பொழுது இருவரு க்கும் கைகலப்பு ஏற்பட்டது. மோதல் போக்குக்கு மெஸ்சி தான் காரணம் என்று சிவப்பு அட்டையைக் கொடுத்து கள நடுவர் அவரை வெளியேற்றினார். சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த மெஸ்சி வார்த்தைகளால் நடுவரை வறுத்தெடுத்தார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கோபா அமெரிக்கா நிர்வாகம் (CONMEBOL) துரித விசாரணையில் களமிறங்கி மெஸ்சிக்கு ஒரு போட்டியில் (சர்வதேச) விளை யாடத் தடை மற்றும் 1,500 டாலர் அபராத மும் விதித்தது. இந்த தடை யால் மார்ச் மாதம் நடக்க இருக்கும் 2022 உலகக்கோப்பை தகுதி சுற்றின் முதல் போட்டியில் மெஸ்சி விளையாட மாட்டார். கால்பந்து முன்னணி வீரரான மெஸ்சி களத்தில் சமத்துப் பிள்ளையாக விளையாடக் கூடியவர். அவருக்குச் சர்வ தேச போட்டியில் தடை விதித் திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
பிரேசில் தான் காரணம் : கதறும் மெஸ்சி
கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் எலியும் பூனையு மாக இருப்பது போல கால்பந்து உலகில் அர்ஜெண்டினா - பிரேசில் அணிகள் கீரியும் பாம்புமாக இருக்கின்றன. கோபா அமெரிக்கா நிர்வாகத்தைப் பிரேசில் நாடு கவனித்து வரு கிறது. தனது தடை உத்தரவுக்குப் பிரேசில் தான் காரணம் என மெஸ்சி ஆதங்கப்பட்டுள் ளார்.