கோபி, மார்ச் 5- கோபி அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்து தப்பிச்சென்ற போதை ஆசாமியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம், கோபி செட்டிப்பாளையம் அருகே உள்ள நஞ்சைகோபி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் லலிதா. இவர் வியாழனன்று அலுவலகத்தில் பணியில் இருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் மதுபோதை யில் கிராம நிர்வாக அலுவலகத் திற்குள் நுழைந்துள்ளார். இதன் பின் கிராம நிர்வாக அலுவலர் லலிதாவிடம், புளியங்காய் பறிப் பதற்கான ஏலம் எப்பொழுது விடப்போகிறீர்கள் எனக்கூறி ஒருமையில் பேசியுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர், முறை யாக தண்டோரா மூலம் அறிவிப்பு செய்யப்படும். அப்போது வந்து ஏலம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி, புளியங்காய்கள் மரத்தி ருந்து விழுந்து வீணாகிறது என்று கூறி கிராம நிர்வாக அலுவலரின் மேஜையின் மீதிருந்து கிராம வரைபடம் அடங்கிய ஆவண புத்தகத்தை எடுத்து கிழிந்தெறிந் துள்ளார். இதன்பின் வெளியில் வந்தவர் அலுவலக ஐன்னல் கதவை தாக்கி சேதப்படுத்தியுள் ளார். மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம நிர்வாக அலு வலருக்கு, அவர் கொலை மிரட் டல் விடுத்து சென்றதாக கூறப்படு கிறது. இதையடுத்து கிராம நிர் வாக அலுவலர் லலிதா, கோபி செட்டிப்பாளையம் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, தப்பிச் சென்ற மூர்த்தியை தேடி வரு கின்றனர்.