ஈரோடு,ஜூன் 26- ஈரோட்டில் நிருபர்கள் மீது தாக் குதல் நடத்திய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகன் உள்ளிட்ட அதி முகவினர் மீது நடவடிக்கை எடுத்திட மறுக்கும் காவல்துறையின் நடவடிக் கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாது, ஈரோடு குமலன்குட்டை அரசுப் பள்ளியில் 2019 ஜூன் 24 ஆம் தேதியன்று தமிழக அரசின் விலை யில்லா லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி அரசு விழாவாக நடைபெற்றது. இந்த அரசு விழாவில் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு, ஈரோடு மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.வி.ராமலிங்கம் மற்றும் ஈரோடு காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங் கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கடந்தாண்டு கல்வி பயின்ற மாணவ, மாணவிகள் தங்களுக்கு தற்போதுவரை லேப் டாப் கிடைக்காதது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்களிடம் முறை யிட்டுள்ளனர். அப்போது, அம்மாண வர்களை ஆளும் கட்சியின் நிர்வாகி கள் ஒரு வகுப்பறைக்குள் அழைத்துச் சென்றனர். இதனை கண்ட ஜூனியர் விகடன் நிருபரும், ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர் நலச்சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினருமான நவீன் மற்றும் தமிழ் இந்து நாளிதழின் நிருபரும் ஈரோடு மாவட்டப் பத்திரிகை யாளர் நலச்சங்க மாவட்ட தலைவரு மான எஸ்.கோவிந்தராஜ் உள்ளிட்ட சில நிருபர்கள் மாணவர்களை அழைத்து செல்லப்பட்ட வகுப்பறை அருகே சென்றனர். அப்போது அங்கிருந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.வி.ராம லிங்கத்தின் மகன் ரத்தன் பிரித்வி மேற்குறிப்பிட்ட இரு நிருபர்களையும் தாக்கியுள்ளார். குறிப்பாக, கன்னத் தில் அறைந்து இருவரையும் தள்ளி விட்டு, கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார். இத்தாக் குதல் சம்பவமானது சட்டமன்ற உறுப்பினர்களான கே.வி.ராமலிங் கம், கே.எஸ்.தென்னரசு மற்றும் காவல் துறை, அரசு அதிகாரிகள் முன்னிலையிலேயே நடந்துள்ளது. இதனால் உடல், மனரீதியாக பாதிக் கப்பட்ட இருவரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளி யாக அனுமதிக்கப்பட்டனர். இவர் கள் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இரவு 1.20 மணியளவில் காவல் துறை நிர்பந்தத்தின் பெயரில் அரசு மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக, ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்க செயலாளர் எஸ்.பி, ஜீவா தங்கவேல், பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய எம்.எல்.ஏ. மகன் உள்ளிட் டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண் காணிப்பாளர் சக்தி கணேசனிடம் புகார் அளித்துள்ளார். இப்புகாரைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய காவல்துறை இது ஆளும் கட்சியினர் சம்பந்தப் பட்டுள்ளதால் மெளனம் காத்து வரு கின்றனர். புகார் அளிக்கப்பட்ட உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய் யப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு மேல் நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் வலி யுறுத்திய பிறகும், பத்திரிகையாளர் சங்கம் சார்பில் மாவட்ட கண்காணிப் பாளர் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகும் இதுவரை முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யாமல் ஆளும் கட்சிக்கு சாதகமாக காவல்துறை செயல்படுவது என்பது கண்டனத்திற்குரியதாகும். ஆகவே, இப்புகார் தொடர்பாக உடனடியாக காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.