ஈரோடு, ஜூலை 5- தோழர் அசோக்கின் நினைவேந்தல் கூட்டம் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்கில் நடை பெற்றது. நெல்லை ஆதிக்க சாதி வெறியர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட பொருளாளர் தோழர் அசோக்கின் நினை வேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பெருந்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத்தின் கிளை தலை வர் அன்பழகன் தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாவட்ட தலைவர் வி.ஏ.விஸ்வநாதன், மாவட்ட பொரு ளாளர் எஸ்.ஸ்டாலின், கிளைச்செயலாளர் வி.கே.வாசுதேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல், ஈரோடு சூரம்பட்டி கிளையின் சார்பில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு கிளைத் தலை வர் கோகுல் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வி.ஏ.விஸ்வநாதன், மாவட்ட பொருளாளர் எஸ்.ஸ்டா லின், கிளை செயலாளர் ஹரிஷ், நகர தலைவர் கார்த்திக், நகர கமிட்டி உறுப்பினர் தமிழ் உட்பட பலர் பங்கேற்றனர்.